Siragadikka Aasai: சிந்தாமணியிடம் இருந்து பணத்தை தூக்கிய முத்து… பல்ப் வாங்கிய சிந்தாமணி!

by Akhilan |
Siragadikka Aasai: சிந்தாமணியிடம் இருந்து பணத்தை தூக்கிய முத்து… பல்ப் வாங்கிய சிந்தாமணி!
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

முத்து பணத்தை எடுத்து விட உடனே இங்கிருந்து கிளம்பலாம் என்கிறார் ரவி. ஹாலுக்கு வரும் மூவரும் அட்ரஸ் மாறி வந்துவிட்டோம். இங்க எந்த பணமும் இல்லை எனக் கூறும் முத்து கிளம்புகிறார். வாசல் வரை அமைதியாக வர ரவி, செல்வத்துடன் ஓடி போய் காரில் ஏறி விடுகின்றனர்.

திரும்பி பார்த்தால் ஸ்ருதி இல்லாமல் போக அந்த நேரம் சரியாக சிந்தாமணியின் காரும் வருகிறது. அவர் வாசல் வந்து நிறுத்த ஸ்ருதியும் வாசல் வந்து விடுகிறார். நீ யாருமா என் வீட்டில் இருந்து அவர் கேட்க ஸ்ருதி திணறுகிறார். உடனே சிந்தாமணி சரி நீ இங்கையே இரு நான் கொஞ்ச நேரத்தில் வரேன் என உள்ளே செல்கிறார்.

அந்த கேப்பில் ஸ்ருதி ஓடி வந்து காரில் ஏறி விடுகிறார். பின்னர் முத்து மீனாவுக்கு கால் செய்து சிந்தாமணி வீட்டில் இருந்து பணத்தை எடுத்த விஷயத்தை கூறுகிறார். பின்னாடியே ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அவங்களுக்கு போன் பண்ணி பேசு என்கிறார்.

மீனா அதெல்லாம் எதுக்கு பிரச்னை என கேட்க அதெல்லாம் எப்படி பிரச்சினையாகும். அப்படி பண்ணா அந்த அம்மாவுக்கு தான் பிரச்சனை எனக் கூற மீனா சரி எனக்கும் அவங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டி இருக்கு நான் பேசுறேன் என்கிறார்.

சிந்தாமணி வீட்டில் அவர் வெளியில் வர வேலையாட்கள் வீட்டிற்கு வருமானத்துறை சோதனை வந்ததாக கூறுகின்றனர். கோடிக்கணக்கிலா பணம் வச்சிருக்கோம். இங்க ஏன் வந்தாங்க எனக் கேட்க சோதனை பண்ணுவதற்காக வந்தாங்க ஆனா போகும்போது ஒரே ஒரு மஞ்சப்பை மட்டும் எடுத்து சென்றதாக கூறுகின்றனர்.

உடனே ஓடி சென்று பீரோவை பார்க்கும் சிந்தாமணி அங்கு மீனாவிடம் இருந்து எடுத்த பணம் மட்டும் இல்லாமல் போக அதிர்ச்சி அடைகிறார். இதில் ஏதோ தப்பு இருக்கு என அவர் யோசித்துக் கொண்டிருக்க சரியாக மீனா கால் செய்கிறார்.

சிந்தாமணி போனை அட்டென்ட் செய்ய என்ன வருமானவரித்துறை ஆளுங்க வந்தாங்களா எனக் கேட்க உனக்கு எப்படி தெரியும் எனக் சிந்தாமணி கேட்கிறார். வந்தது என் வீட்டு ஆளுங்க. என் கணவர் எப்படி சும்மா விடுவாரு? அவர் நல்லவங்களுக்கு தான் நல்லவரு.

கெட்டவங்களுக்கு ரொம்ப கெட்டவரு என்கிறார். இதில் கடுப்பாகும் சிந்தாமணி அப்போ வந்தது என் புருஷன் தான். அவ்ளோ தைரியம் ஆச்சா என சிந்தாமணி கேட்க எங்க காசை தானே எடுத்தோம். இப்பையும் சொல்றேன் வாழ் வாழ விடு.

உங்களால என் கையில் அடிப்பட்டுச்சு. எனக்கு கிடைக்க இருந்த ஆர்டர் போச்சு இனிமேலாச்சும் உங்கள பாருங்க எனச் சொல்லி வைக்கிறார். வீட்டிற்கு வரும் முத்து அண்ணாமலையிடம் பணம் கிடைத்த விஷயத்தை சொல்ல அவர் யார் எடுத்தா எனக் கேட்க சிந்தாமணி என்கிறார்.

பின்னர் விஜயாவிடம் அவர் சேர்ந்ததுக்கும் மீனாவை அழிக்க தான் காரணம் என்கிறார். உடனே விஜயா இவ தான் அவங்க இடத்தை பிடிக்க ஆசைப்படுறா என்கிறார். ஸ்ருதி ஏற்கனவே ஆண்ட்டி இது மாதிரி மீனாவை தடுத்தாங்க. இந்த கிரைமிலும் இவங்களுக்கு பங்கு இருக்கலாம் என்கிறார். அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.

Next Story