மீனா-முத்துவை வெளியேத்த ரவுண்ட் கட்டிய விஜயா..! சிறகடிக்க ஆசையில் நடக்க இருக்கும் அடுத்த களேபரம்..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா கத்தியோடு நிற்க இந்த ஆப்பிளையும் கட் செஞ்சி கொடு என்கிறார் விஜயா. அங்கு வரும் ஸ்ருதி எனக்கு இட்லி வேண்டாம். ஆஃப் பாயில் மட்டும் போதும் என்கிறார். அங்கு வரும் முத்து, முட்டையா வேணும். நான் போடுறேன்.

ப்ரிட்ஜை திறந்து முட்டையை கீழே போட்டு உடைத்து விடுகிறார். மீனா என்ன வேலைக்காரியா இஷ்டத்துக்கு லிஸ்ட் போடுறீங்க எனத் திட்டுகிறார். இதனால் ஸ்ருதி, ரோகினி வெளியில் சாப்பிட்டு கொள்வதாக கூறி கிளம்பி விடுகின்றனர். முத்துவும் வேலைக்கு கிளம்பி விடுகின்றனர்.

இதையும் படிங்க: இறுதி மேடையை முத்தமிடப்போவது யார்? ஃபினாலே டிக்கெட்டுக்கு தகுதியான அந்த ஐந்து ‘பிக்பாஸ்’ போட்டியாளர்கள்

ரோகினி, ஸ்ருதி வேலைக்கு போறாங்க. உன்னால வீட்டு வேலையை கூட செய்ய முடியாதா? பாரு அவங்க கோச்சிக்கிட்டு போயிட்டாங்க. இன்னைக்கு அவங்களுக்கு பிடிச்சத சமைச்சு வக்கணும் எனக் கூறுகிறார். முட்டையை க்ளீன் செஞ்சிட்டு மார்க்கெட் போயிட்டு வா என்கிறார். மீனாவும் போக அங்கு அவர் அம்மா பார்த்து வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.

கழுத்தில் என்ன தாலி செயின் காணும். மாப்பிள்ளை எதும் வாங்கி அடமானம் வச்சிருக்காரா? எனக் கேட்கிறார். இல்லை எனக் கூறி நடந்த விஷயங்களை கூறுகிறார். நான் சீட்டு போட்டு இருக்கேன். அதுல செயின் வாங்கிக்கோ எனக் கூற வேண்டாம் அவரே வாங்கி தருவாரு. நீங்க சீதாக்கு செய்யுங்க எனக் கூறிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: ஏலே இது வீடா? இல்ல பஞ்சாயத்து குடோனா? பாக்கியலட்சுமியில் அடுத்தடுத்த அதிரடி..!

வீட்டுக்கு வர விஜயா என்ன இவ்வளோ லேட்டு? எங்க போய் சுத்திட்டு வந்த எனக் கூறுகிறார். பாத்து வாங்கிட்டு வர லேட் ஆகிட்டு எனக் கூற ரோகினிக்கு மீன் குழம்பு, ஸ்ருதிக்கு சிக்கன் சூப் வச்சிடு. மனோஜ், ரவிக்கு சப்பாத்தி, சிக்கன் குழம்பு. எனக்கும் உங்க மாமாக்கும் கீரை கடஞ்சிடு என்கிறார்.

சமைத்து முடித்து விட்டு வர துணிகளை தூக்கி போட்டு துவைக்க கூறுகிறார். அடுத்து ஸ்ருதியை கூப்பிட ரவி வர நாம ஒரு கார் வாங்கிடலாம். நாளைக்கே உங்க அண்ணன் வேலை செய்யும் ஷோரூமுக்கு போகலாம் எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Related Articles
Next Story
Share it