Connect with us

latest news

உடைந்த ரோகினி ரகசியம்!… இந்த அண்ணாமலை யாரு பக்கம் தான் இருக்காரு!…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினி பார்லரில் ஓனரை இறக்கிவிடுகிறார் முத்து. ஆனால் அவர் பணம் கொடுக்காமல் செல்ல உள்ளே செல்கிறார். அந்த மேடம் வந்து ரோகினியிடம் பேசிக்கொண்டு ஐ ப்ரோ ட்ரீம் செய்யணும் என்கிறார். 

சரி என ரோகினி உள்ளே செல்கிறார். அப்போ வரும் முத்து காசை தரலை என அந்த மேடமிடம் சொல்ல அவர் ரிசப்ஷனிஸ்ட்டை கொடுக்க சொல்கிறார். அங்கு வரும் பெண்ணிடம் இந்த கடையோட பேரு வேற தானே இருந்துச்சு என்கிறார். அதை இப்போ இந்த மேடம் கிட்ட கொடுத்துட்டாங்க. இப்போ ரோகினியும் இங்கு வேலை செய்றாங்க எனக் கூற அந்த கதையை போட்டோ எடுத்து கொண்டு வீட்டுக்கு செல்கிறார்.

இதையும் படிங்க: கோட் பட சூட்டிங்கில் விஜய்!.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!.. தளபதி லுக் எப்படி இருக்குன்னு பாருங்க!..

வீட்டுக்கு வரும் முத்து அண்ணாமலையை கூப்பிட்டு போய் ரோகினியின் ரகசியத்தினை உடைக்கிறார். இதை கேட்டு அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார். அம்மாவை கூப்பிட்டு விஷயத்தினை சொல்லலாம் என்கிறார். ஆனால் அவளுக்கும் தெரிஞ்சிருக்கும் என சந்தேகப்படுகிறார் அண்ணாமலை.

மனோஜ் விஷயத்தினை மறைத்தது போல இதையும் செஞ்சிருக்கலாம். நீ சும்மா இரு என முத்துவை அடக்கிவிடுகிறார். பார்லரில் இருந்து வரும் ரோகினிக்கு ஜூஸ் போட்டு வைத்து இருப்பதாக சொல்கிறார் விஜயா. ஆமா ஆண்ட்டி பார்லரில் ஒரே வேலை என்கிறார்.

உடனே விஜயா நீ ஏன் செஞ்ச? நான் வேணா அந்த கல்லாவில் வந்து உக்காந்துக்கவா எனக் கூற முத்து இருமி நக்கல் செய்கிறார். ரோகினியை வார்த்தைக்கு வார்த்தை முத்து கலாய்த்து கொண்டு இருக்க அண்ணாமலை சமாளிக்கிறார். பின்னர் மீனா தோசை கொண்டு இருக்க அங்கே உட்கார்ந்து முத்து சாப்பிடுகிறார்.

இதையும் படிங்க: புதுசா புதுசா காட்டுறியே பூஜா ஹெக்டே!.. ஜூம் பண்ணி பண்ணி ரசிக்கும் நெட்டிசன்ஸ்!..

அங்கு வரும் விஜயா இது என்ன புதுப்பழக்கம். இவனுக்கு மட்டும் என்ன ஸ்பெஷலா செஞ்ச எனக் கேட்கிறார். முத்து கடுப்பாகி வைத்து விட்டு செல்கிறார். அப்போ மனோஜ் பசிக்குது சீக்கிரம் சாப்பிட போக முத்து அவரை கலாய்க்கிறார். பார்குல படுக்க போறதுக்கு இவ்வளோ அவசரமா என்கிறார்.

அப்போ அயர்ன் செய்த துணி வர யாரு போட்டா என முத்து கேட்க மனோஜ் நான் தான் என்கிறார். வேலைக்கு போறவங்களே இப்படி செய்ய மாட்டாங்க. காசை உனக்கு நான் அழுகணுமா என்க ரோகினி வந்து அதை கொடுத்து விடுகிறார். பேசமா அயர்ன் கடை போடலாமே? மாசம் நல்ல காசு வரும். உனக்கும் ஓசியா தேச்சிகலாம் என்கிறார்.

இதனால் மனோஜ் அவமானப்பட்டு நிற்கிறார். விஜயா, ரோகினி சொல்ல சொல்ல சாப்பிடாமல் சென்று விடுகிறார். அண்ணாமலையிடம் இதனால் தான் இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கலை என்கிறார். முத்துவை நீ சவாரிக்கு போ என அனுப்பி விடுகிறார். அவர் போனதும் ரோகினி, விஜயா மீனாவை முறைத்து கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: எங்க அண்ணன் அரசியலுக்கு போயிடுவாரு!.. எங்க அண்ணன் டூருக்கு போயிடுவாரு!.. அப்போ கோலிவுட் நிலைமை?.

google news
Continue Reading

More in latest news

To Top