முத்துவை துரத்த வழித்தேடும் ரோகினி… மீனாவுக்கு ஸ்ருதியால் வந்த அடுத்த பிரச்னை… முடியலப்பா

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினி வாங்கி வந்த மசால் தோசையை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். இதில் சண்டை ஆரம்பிக்க மீனா அவர் தெரியாமல் செய்துவிட்டதாக கூறுகிறார். விஜயா தெரிஞ்சு தான் செய்ததாக கடுப்படிக்கிறார்.

ஆனால் முத்து கவலையே படமால் சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்ல காசை கேளு என்கிறார் மனோஜ். அதற்கு முத்து, நீ கேட்பேனு தெரியும். நீ பார்க்கில் போய் படுத்துட்டு வந்தப்ப என் பொண்டாட்டி தான சமைச்சி கொடுத்தா அதில கழிச்சிக்கோ என்கிறார்.

இதையும் படிங்க: அவர் மேல எந்த தப்பும் இல்ல!.. நான்தான் காரணம்!.. வாலிக்காக பழியை ஏற்றுகொண்ட எம்.எஸ்.வி..

பிறகு விஜயாவும், பார்வதியும் தெருவில் நடந்து சென்று கொண்டு இருக்கின்றனர். அப்போ மனோஜ் வேலை செய்யும் ஹோட்டலில் சாப்பிடலாம் எனச் செல்கின்றனர். இதை பார்த்த மனோஜ் மறைந்து கொள்கிறார். இன்னொருவரை ஆர்டர் எடுக்க சொல்கிறார். விஜயா, மனோஜுக்கு கால் செய்து பூரி வாங்கிட்டு வரவா எனக் கேட்கிறார்.

நான் மீட்டிங்கில் இருக்கேன். வர லேட் ஆகுமா என வைத்துவிடுகிறார். பார்லரில் இருக்கும் ரோகினி, வித்யாவிடம் காசை கொடுத்து அந்த வசீகரனிடம் கொடுத்துவிட சொல்கிறார். இது எப்படி எனக் கேட்க கடன் வாங்கியதாக சொல்கிறார். தொடர்ந்து தனிக்குடித்தனம் போயிடலாம் என்கிறார்.

இதையும் படிங்க: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா!.. அட தெரியாம போச்சே…

அடுத்து வீட்டுக்கு வரும் ஸ்ருதி கொசு மருத்தை ஹால் முழுவதும் மொத்தமாக அடித்துவிடுகிறார். பின்னர் ஸ்ருதிக்கு வேலை வந்துவிட கிளம்பிவிடுகிறார். அப்போ அண்ணாமலை வீட்டுக்குள் வர மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரிந்து விடுகிறார். மீனா ஓடி வந்து எல்லாருக்கும் கால் செய்து பார்க்க யாருமே எடுக்கவில்லை. உடனே அண்ணாமலையை ஹாஸ்பிட்டல் அழைத்து செல்லலாம் எனக் கிளம்புவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

 

Related Articles

Next Story