Connect with us

latest news

மாட்டிக்கிட்ட பங்கு!… மனோஜை வசமாக சிக்க வைத்த முத்து.. கண்ணீருடன் நிற்கும் ரோகினி..

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பார்க்கிற்கு நோட்டீஸ் கொடுக்க போகும் முத்து அங்கு மனோஜை பார்க்கிறார். உடனே உசாராக வீடியோவை எடுக்க தொடங்குகிறார். அப்போது அங்கு இருக்கும் செக்குரிட்டி இவங்க இங்க தான் ரெண்டு மாசமா இருக்காங்க. சரியான நேரத்துல சாப்பிடுவாங்க.

தூங்கிட்டு வீட்டுக்கு போவாங்க என உண்மையை உடைத்துவிடுகிறார். இதனால் அப்போ வேலைக்கு போகாம ஏமாத்துறீயா என மனோஜை மொத்த நாளையும் வீடியோ எடுத்துவிடுகிறார். பின்னர் அவருக்கு முன்னால் கிளம்பி வீட்டுக்கு வந்துவிடுகிறார். உடனே எல்லாரையும் ஹாலுக்கு அழைக்கிறார். என்ன இப்போ சண்டையா என விஜயா வம்பு பேசுகிறார்.

இதையும் படிங்க: ஓடாத படத்தை ஓடிடியில் பார்த்து கேஸ் போட்ட ராம பக்தர்கள்!.. நயன்தாராவுக்கு எல்லா சைடுலயும் அடி விழுது!

இருங்க இருங்க மனோஜ் இன்னும் வீட்டுக்கு வரலையா என்கிறார். இப்போ எதுக்கு அவரை வம்பு இழுக்கிறீங்க என ரோகினி கேட்க அவன் தான ஆட்ட நாயகனே என்கிறார் முத்து. அவன் வேலைக்கு போற லட்சணத்தை பாருங்க என மொத்தமாக படம் போட்டு காட்டுகிறார். இதில் ரோகினி அதிர்ந்து நின்று விடுகிறார்.

குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். அண்ணாமலை என்னம்மா இது எனக் கேட்க அவர் எப்பையாது கிளையண்ட்டை பார்க்க போறப்ப இப்படி போவதா சொல்லி இருக்காரு என்கிறார். முத்து அதெல்லாம் பொய் என வாட்ச்மேனை எடுத்த வீடியோவை போட்டு காட்டுகிறார்.

இதையும் படிங்க: இந்தி படத்துல ஏன் நடிக்கிறீங்க!.. வந்து விழந்த கேள்வி.. பத்திரிகையாளரிடம் எகிறிய விஜய் சேதுபதி!

முத்து என்ன ரோகினி உங்க ஹஸ்பெண்ட் இவ்வளவோ பொய் சொல்லி இருக்காரு எனக் கூற இருங்க இருங்க இன்னும் இருக்கு என ஷோரூமில் கேட்ட  வீடியோவையும் போட்டுக்காட்டி வேலைக்கே மனோஜ் செல்வதில்லை என்பதை நிரூபித்துவிடுகிறார். இதை தொடர்ந்து, மனோஜ் வந்து என்னடா வீட்டு வாசலில் இவ்வளோ பூவை போட்டு வச்சிருக்க.

என்னோட வேலை பாக்கிறவங்க வந்தா என்ன பத்தி என்ன நினைப்பாங்க என பந்தா பேசிக்கொண்டே உள்ளே வருகிறார். வந்து இன்னைக்கு யார் ஷோரூம் வந்தாங்க தெரியுமா? விஜய் ஷோரூம் வந்தார் என பேசிக்கொண்டே போக குடும்பமே கொலைவெறியில் நிற்கிறது. ரோகினிக்கு கண்ணில் கண்ணீர் வருவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top