Siragadikka Aasai: ரோகிணிக்கு இந்த வாய் மட்டும் அடங்க மாட்டுங்குதே! விஜயாவுக்கு தான் அடுத்த ஸ்கெட்ச்சா?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் நீத்து தங்களுக்கு கொடுத்த பணத்தில் இருந்து 5 ஆயிரம் எடுத்து கொடுக்கிறார். உடனே ரவி, மீனாவிடம் நீங்க சமைச்சி பிசினஸ் செஞ்சாலும் சூப்பரா போகும் என ஐடியா கொடுக்கிறார். உடனே மனோஜ் நீங்க சமைக்கிறது, பூ கட்றது எல்லாம் பிசினஸா? அப்ப நான் செய்றதுக்கு என்ன பெயரு என்கிறார்.
ரவி கோபமாக வர அவரை அமைதியாக அடக்கிவிட்டு முத்து பேசுகிறார். அவங்க ரெண்டு பேரும் சொந்த உழைப்புனால செய்றாங்க. நீ என்ன செய்ற இன்னொருத்தவங்க கிட்டேந்து பொருளை வாங்கி விற்பனை செஞ்சிட்டு இருக்க. 10 நாளுல அது விக்கலனா அதை திரும்ப எடுத்து போய்டுவாங்க என்கிறார்.
உடனே கடுப்பான விஜயா உனக்கு கட்டி வச்சிருக்கேனு ஒன்னு அதனால் இந்த வீட்டில வேற யாரையும் பேச முடியலை என்கிறார். ரோகிணி கூட நானும் சம்பாரிச்சிட்டு தான் இருக்கேன் எனக் கூற என்ன செஞ்சாலும் அதுவும் மாச சம்பளம் தானே என்கிறார்.

அவரை அடக்கும் அண்ணாமலை நீ ஏன் இப்படி காசை வச்சி ஒருத்தவங்களை எடை போடுற எனக் கேட்கிறார். என்ன சொன்ன 300 கோடி உங்க அப்பா அக்கவுண்ட்ல இருக்கா என நக்கலாக பேசுகிறார் விஜயா. இந்த மீனாவாது பூ கட்டி விக்கிறா? இவ தின கூலி என மனோஜை இழுத்துக்கொண்டு செல்கிறார்.
முத்துவிடம் பாவம் ரோகிணி என மீனா கூற பார்லர் அம்மா என்னைக்காச்சும் உனக்கு பாவப்பட்டு இருக்கா என்கிறார். முத்து, ரவி, மனோஜ் மூவரும் மாடியில் குடித்து கொண்டு பேசிக்கொண்டு இருக்கின்றனர். ரோகிணிக்காக ரவி மற்றும் முத்து சப்போர்ட் செய்து பேசுகின்றனர்.
அண்ணிக்கு நீ ஆறுதலா இருக்கணும் என ரவி கூற நான் என்ன சொல்ல அம்மா ஒரு பக்கம். ரோகிணி ஒரு பக்கம் இருக்காங்க. ரோகிணி என் கூட பேசுங்கிறா. அம்மா என்னை ரோகிணி கூட பேசக்கூடாது. அப்படி பேசுனா நான் அவங்களுக்கு பையனா இருக்க முடியாது எனக் கூறி இருப்பதாக சொல்கிறார்.
வீட்டில் ரோகிணியுடம் ஸ்ருதி மற்றும் மீனா பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஏன் ஆண்ட்டிக்கு உங்க மேல இருக்க கோபமே குறையலை என்கிறார். உடனே ஐடியா கேட்க பார்வதி ஆண்ட்டியிடம் பேசி பார்க்க சொல்கிறார். அதுவும் அவங்க எப்படியும் சாமியாரிடம் தான் போவாங்க. அந்த சாமியை வைத்து ரோகிணி தான் குடும்பத்துக்கு பெரிய அதிர்ஷ்டம் எனச் சொல்ல வைக்கலாம் என ஸ்ருதி கூறுகிறார்.
ஆனால் ரோகிணி வேண்டாம். என்னை மாட்டி விடுறதுக்கே இந்த வீட்டில இரண்டு பேரு இருக்காங்க எனக் கூற மீனா நாங்க ஏன் மாட்டிவிடணும்? எங்களுக்கு அந்த தேவையே இல்ல. அவர் எல்லாருக்கு முன்னாடி தான் கல்யாண வீட்டில் இருந்தார் என்கிறார்.
நாங்க பார்க்கலை என்றாலும் இங்க யாரு வேண்டும் என்றாலும் பார்த்து இருக்கலாம் என்கிறார். அப்படி நீங்க பார்த்து இருந்தா அவரை என் கிட்ட அழைச்சிட்டு வந்து தனியா பேசி இருக்கணும் என ரோகிணி கூற மீனா நீங்க வீட்டில் சொல்ல வேண்டாம் எனச் சொல்லி இருப்பீங்க என்கிறார்.
நாங்க என்னைக்குமே மாமாவிடம் பொய் சொல்ல மாட்டேன் என்கிறார். நீங்க செஞ்சது தப்பு ரோகிணி. நானும், ரவியா இருந்தாலும் இப்படி தான் செஞ்சி இருப்போம் எனக் கூற உங்க ரெண்டு பேருக்கும் எனக்கு உதவி செய்ய ஆசை இல்லை. மோசமான மனசோட இருக்கீங்க என திட்டிவிட்டு செல்கிறார்.
ஸ்ருதியும் சம்மந்தப்பட்டவங்களுக்கே வேண்டாம் என்றால் நமக்கு என்ன வந்துச்சு எனச் சொல்லி செல்கிறார். அடுத்த நாள் காலை பார்வதியை பார்க்க ரோகிணி வருகிறார்.