Connect with us

latest news

இப்படியே மாத்தி மாத்தி வேலை செஞ்சிக்கிட்டு இருந்தா எப்படி? யார் பெருசுனு அடிச்சு காட்டுறது..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியின் போனில் டவர் கிடைக்காமல் மேசை மீது ஏறி எல்லாம் தேடிக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்து அங்கு வரும் விஜயா என்னவென்று விசாரிக்க இல்ல ஆண்ட்டி இங்க அடைச்சலா இருக்கு. டவர் கூட இல்லை என்கிறார்.

என்ன ஆச்சு? ஒரு ஜூஸ் ஆர்டர் செய்யலாம் நினைச்சேன் என்கிறார். அதுக்கு எதுக்கு ஆர்டர் செஞ்சிக்கிட்டு மீனா நல்லா போடுவா எனக் கூறி அவரை அழைக்கிறார். மீனா ஹாலுக்கு வர அவரிடன் ஜூஸ் போட சொல்கிறார். அவரும் சரியென என கிளம்ப ஸ்ருதி ஹனி போடுங்க என்கிறார்.

இதையும் படிங்க: பிரபாஸோட அடுத்த பட ஹீரோயின்!.. தியேட்டரில் எப்படி ரசிகர்களிடம் சிக்கியிருக்காங்கன்னு பாருங்க!

பின்னர் மீனா போய் ஜூஸ் போட செல்ல இவங்க ரெண்டு பேரையும் சேரவே விடக்கூடாது என முடிவெடுக்கிறார் விஜயா. அதனால் மீனா எடுத்து வரும் ஜூஸை மேஜையில் வைத்துவிட்டு சமையல் வேலை செய்ய சொல்லி அனுப்பி விடுகிறார். இதை தொடர்ந்து அங்கு வரும் ரோகினி தனக்கு தானோ என நினைத்து குடிக்க போகிறார்.

அந்த ஜூஸை ஸ்ருதிக்கு கொடுக்க சொல்ல அவருக்கு முகமே வாடி விடுகிறது. அந்த நேரத்தில் அங்கு வரும் முத்து பதவி பறிப்போச்சா. 50 பவுன் வந்ததால் இப்படி. நாளைக்கே நீங்க 51 கொடுத்தா எல்லாம் மாறிடும் என்கிறார். இது ரோகினிக்கு கஷ்டமாகி விடுகிறது. இருந்தும் அதைக் காட்டிக்கொள்ளாமல் ஸ்ருதியிடம் கொடுத்து விட்டு வருகிறார். 

பின்னர் அங்கு வரும் ஸ்ருதி நெயில் கட்டர் இருக்கா என விஜயாவிடம் கேட்க அவர் எதுக்கு ரோகினி எல்லா செஞ்சி விடுவா என்கிறார். ரோகினிக்கு கடுப்பானாலும் விஜயா பேச்சை தட்டாமல் செய்துவிடுகிறார். இதை தொடர்ந்து ரோகினி தன்னுடைய தோழியை பார்க்க போகிறார். அவரிடம் இந்த விஷயங்களை சொல்லி வருத்தப்படுகிறார்.

இதையும் படிங்க: வர கோபத்துக்கு பிக்பாஸ் வீட்டுக்கு போயி நல்லா கேட்பேன்!… விசித்ரா மீது காண்டான ஷகிலா….

பின்னர் இதை சரி செய்ய முடிவு கட்ட நகை கொடுக்க முடியாது. ஆனால் பாக்கெட் மணி கொடுக்கலாம் என 5 ஆயிரம் கொடுக்கலாம் என்கிறார். போக போக குறைச்சிக்கலாம் எனக் கூறுகிறார். பின்னர் 5 ஆயிரத்தை 50 நோட்டுகளாக மாற்றிவர சொல்கிறார். அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து விஜயாவை அழைக்கிறார்.

அவர் நீயாமா? நான் ஸ்ருதினு நினைச்சேன் என பல்ப் கொடுக்கிறார். பின்னர் ப்யூட்டி பார்லர் லாபம் எனக் கூறி 5 ஆயிரத்தை கொடுக்கிறார். நான் கொண்டு வந்த மருமகள்கள் தான் பெஸ்ட். நீங்க தான் எனக்கு ஸ்பெஷல் என்கிறார். இதை சாமி ரூமில் இருந்துகேட்கும் மீனா கவலைப்படுகிறார்.

இதை தொடர்ந்து விஜயா மற்றும் ரோகினி பேசுவதை ஒட்டுக்கேட்டு கொண்டு இருக்கிறார் மனோஜ். ரோகினி தனக்கு ஜூஸ் எனக் கேட்க மீனாவை கொண்டு வர சொல்கிறார் விஜயா. அவர் ரூமுக்குள் சென்றதும் மனோஜ் விஜயாவிடம் வந்து காசு கேட்கிறார். அவர் இல்லை எனக் கூற ரோகினி காசு இருக்கே என ஷாக் கொடுப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top