More
Categories: Cinema News latest news television

அடேய் இந்த சீரியல் மட்டும் தான் எல்லா சரியா நடக்குது.. ஆனா ரொம்ப மொக்க போடுறீங்க மக்கா..! ஏன் இப்படி?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா முத்துவை பார்த்து கீழே கூப்பிடுகிறார். ஆனால் முத்து, அப்பாக்கு நெஞ்சு வலி வந்ததுக்கு நான் தான் காரணமென மனோஜும், ரவியும் சொல்றாங்க என்கிறார். இதனை தொடர்ந்து மீனா அவரை சமாதானப்படுத்துகிறார்.

மாமா கீழே கூப்பிடுவதாக கூற நான் வரவில்லை என்கிறார் முத்து. மாமா கூப்பிட்டாரு. அவரை மதிக்கிறீங்கள அப்போ வாங்க எனக் கூறி அழைத்து செல்கிறார். கீழே வரும் முத்து எதுக்குப்பா கூப்பிட்டீங்க எனக் கேட்கிறார். இவங்களை ஆசீர்வாதம் செய்யணும் என்கிறார் அண்ணாமலை. இதனால் முத்துவுக்கு கடுப்பு வந்து பேச விஜயா இதுக்கு தான் இவன் வேணாம் சொன்னேன் என்கிறார்.

இதையும் வாசிங்க:தமிழ் டைரக்டருக்கு நோ.. மலையாள டைரக்டரை லாக் செய்த யாஷ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அண்ணாமலை பழசையெல்லாம் மறந்துட்டு இவங்க நல்லா இருக்கணும்னு ஆசீர்வாதம் செய் என்கிறார். கடைசியில் முத்துவும் ஒப்புக்கொள்கிறார். இதையடுத்து மூன்று ஜோடிகளில் காலில் விழுந்து ஸ்ருதி, ரவி ஆசீர்வாதம் வாங்கிக்கொள்கின்றனர்.

அடுத்து அண்ணாமலை மூன்று மருமகள்களையும் அருகில் அழைத்து எனக்கு நீங்க மூணு பேருமே பொண்ணு மாதிரி தான் என்கிறார். நீங்க நினைச்ச மாதிரியே நாங்க இருப்போம் மாமா என்கிறார் மீனா. எனக்கு இப்படி கூட்டுக்குடும்பமா தான் வாழணும்னு ஆசை என்கிறார் ரோகினி.

இதையும் வாசிங்க: பாசமழையில் ரொம்ப உருகுறீங்களே… ராதிகாவும், பாக்கியாவும் அக்கா, தங்கச்சி மாதிரியாம்..! கோபி கேட்டா என்ன ஆகும்?

ரூமுக்குள் சென்ற ரவி, ஸ்ருதிக்கு அட்வைஸ் செய்ய இது பெட்ரூம் என ஸ்ருதி சொல்ல இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டு இருக்கின்றனர். மாடியில் இருக்கும் முத்து மீனாவிடம் புலம்பிக்கொண்டு இருக்கிறார். அவனுங்க என்னை தப்பு சொல்வதாக கூறுகிறார். என்னாலையா அப்பாக்கு இப்படி ஆச்சு எனக் கேட்க உடனே மீனாவும் ஆமாம் எனக் கூறிவிட முத்து ஜெர்க் ஆகி நிற்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Published by
Akhilan

Recent Posts