Connect with us

Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

latest news

Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை முத்து மற்றும் மீனா நகர்த்து இருக்கும் நிலையில் அடுத்து நடக்க இருக்கும் நிகழ்வு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரோகிணி மற்றும் மனோஜ் இடையேயான விவாகரத்து வழக்கு தான் தற்போதைய சிறகடிக்க ஆசை சீரியலின் மெயின் கண்டெண்ட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் ரோகிணியே அவருக்கு வாதாடி சொல்லும் பொய்யை நீதிபதியே நம்பிவிடுகிறார். 

இதில் மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற சிந்தாமணி பொய் சாமியாரை செட்டப் செய்து நாடகம் போட அவரோ சீதாவின் செயினை பறித்த சம்பவத்தால் வசமாக முத்து மீனாவிடமே மாட்டி கொள்கிறார். ஒரு கட்டத்தில் சிந்தாமணி சொன்னது போல அந்த பொய்யையும் ரோகிணி மீதே போட்டு விடுகிறார். 

இதனால் கடுப்பான விஜயா, மனோஜை வைத்து ரோகிணிக்கு சவுக்கடி கொடுக்க பிரச்சனை மனித உரிமை ஆணையம் வரை சென்று விடுகிறது. இதனால் ரோகிணிக்கு அவர்கள் ஆதரவாக பேசி விவாகரத்தை தர முடியாது. அவர் இந்த வீட்டில் வாழ்வார் எனக் கூறி விட்டார். 

இதில் அதிர்ச்சியான விஜயா காசு கொடுக்க போக அவரும் ஜெயில் செல்ல கூடும் என்ற சிக்கலும் உருவாகி விட்டது. இதனால் முத்து மற்றும் மீனா சரியாக யோசித்து மனோஜை அந்த ஆணைய அதிகாரியிடம் ரோகிணியின் மொத்த உண்மையையும் உருக்கமாக பேச வைத்து விடுகின்றனர். 

இதில் அவரும் ரோகிணியிடம் பொய் இருப்பதாக கூறி வெளியே போக சொல்லிவிடுகிறார். இதனால் வழக்கில் ரோகிணிக்கு இது முதல் பின்னடைவாக இருக்கலாம். மனோஜுக்கு ரோகிணியுடன் விவாகரத்து நடக்கும் பட்சத்தில் அவர் வில்லத்தனம் அதிகரிக்கும் என்றே நம்பப்படுகிறது. 

இதனால் இன்னும் சீரியல் கதைக்களம் சூடு பிடிக்கும். அவர் வாழ்க்கை போனதற்கு முத்து மீனாவை இறங்கி பழி வாங்கலாம் என்பதால் அந்த காட்சி களம் நன்றாக இருக்கலாம் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

To Top