Connect with us

latest news

முத்துவின் வாழ்க்கையில் தொடங்கிய பிரச்னை..! ரோகினிக்கு செக் வைத்த விஜயா..! சிக்கிட்டோமோ..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை தல தீபாவளி ஜோடிகளுக்கு ட்ரெஸ் எடுத்து கொடு என விஜயாவிடம் சொல்லி கொண்டு இருக்கிறார். அப்போது விஜயா ரவியையும் வீட்டுக்கு கூப்பிடலாம் எனக் கூறுகிறார். இதை கேட்ட முத்து கோபப்படுகிறார்.

மீனாவால தான் அவனுக்கு இந்த நிலைமை எனப் பழியை அவர் மீது போடுகிறார். என்ன தான் இருந்தாலும் அவனும் இந்த வீட்டு பையன் தானே என்கிறார். அப்பாவ கஷ்டப்படுத்திட்டு போன அவன் எப்பையுமே இங்க உரிமை கொண்டாடிக்கிட்டு வர முடியாது என்கிறார்.

இதையும் படிங்க: திருவிளையாடல் தருமி வேடத்தை நாகேஷ் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?.. ஒரு ஆச்சர்ய தகவல்..

மனோஜும் அவர் பெரிய இடத்தில் கல்யாணம் செய்து இருக்கான். இங்க வந்தா நமக்கு மரியாதை இல்லை என மனதில் நினைத்துக்கொண்டு முத்து சொல்வது சரி தான். அவன் இங்க வரவேண்டாம் எனக் கூறி விடுகிறார். அந்த நேரத்தில் மீனாவும் அம்மா தீபாவளிக்கு அழைக்க வருகிறார்.

பழத்தட்டை வைத்து வீட்டுக்கு அழைக்க அண்ணாமலை கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். இதையடுத்து ரோகினியை பார்த்து நீங்க தல தீபாவளிக்கு போகலையா? இல்ல எங்க வீட்டுக்கு வாங்க எனக் கூப்பிடுகிறார்.

இதனால் ரோகினிக்கு முகமே மாறி விடுகிறது. இதையடுத்து மனோஜ் நல்ல வாய்ப்பு என்கிறார். அவங்க வீட்டுக்கு போறதா எனக் கேட்க இல்ல நாம உங்க வீட்டுக்கு மலேசியா போவோம் என்கிறார். இது ரோகினிக்கு பெரிய அதிர்ச்சி ஆகிவிடுகிறது.

இதையும் படிங்க: ஏமாத்திட்டு போக சான்ஸே இல்ல!.. பிக்பாஸுக்கு பிரபலங்களை தேர்வு செய்ய இவ்வளவு டாஸ்க் இருக்கா?!..

இதையடுத்து விஜயா மீனா அம்மாவை முகத்தில் அடித்தாற் போல பேசிவிடுகிறார். அவரும் கிளம்பி விடுகிறார். இதையடுத்து பயந்து போய் நிற்கும் ரோகினியை பார்த்த விஜயா அவங்க அப்படித்தான் எனக் கூறுகிறார். ஆனா மனோஜ் ஆசைப்படுறது தப்பு இல்லத்தானே என்கிறார். அப்பா இப்போ மலேசியாவில் இல்லை என சமாளிக்கிறார்.

சரி எப்படியும் தீபாவளிக்கு கால் செய்வார் தானே. இத்தனை நாள் ஆச்சு? அவர் கிட்ட நான் பேசவே இல்லை. ஒருவார்த்தை பேசிடுறேன் எனக் கூறுகிறார். அதையடுத்து முத்துவும் மீனாவும் தலை தீபாவளிக்கு மீனா வீட்டுக்கு செல்கின்றனர். 

இதையும் படிங்க:நீங்கலாம் பெரிய நடிகர்.. கொஞ்சம் மனசு வைங்க ப்ளீஸ்!.. நாகேஷிடம் கெஞ்சிய எம்.ஜி.ஆர்..

புடவை கடையில் போய் ட்ரெஸ் எடுத்துட்டு வா என்க மாமாக்கிட்ட தனியா அனுப்புறீங்கனு சொல்லவா என மிரட்டி உள்ளே கூட்டி செல்கிறார். இதையடுத்து கடைக்காரர் மீனா மேல் புடவையை வைத்து காட்ட கடுப்பாகும் முத்து தானே புடவையை செலக்ட் செய்து அழைத்து வந்து விடுகிறார்.

இதையடுத்து நடுவில் ஆட்டோவில் வரும் பைனான்சியர் ஆட்கள் முத்து பணம் கட்டாததால் சொல்லியும் கேட்காமல் காரை எடுத்து சென்று விடுகின்றனர். இதனால் கடுப்பில் இருக்கும் முத்துவிடம் மீனா கேட்க எல்லாம் உன்னால தான் என எரிஞ்சு விழுகிறார். வாங்க வீட்டுக்கு போகலாம் என்க இல்ல அப்பா கஷ்டப்படுவாரு என்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top