முத்துனாலே இளிச்சவாயன் தானா? 45 லட்சத்த 30 நாளுல அடைக்கணுமா? நியாயம் வேணாமா?

Published on: April 24, 2026
---Advertisement---

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் முத்து மற்றும் மீனாவுக்கு அழகாக அடுத்த பிரச்சனையை பார்சல் செய்து வந்து இருக்கின்றனர். இதுகுறித்த அப்டேட்கள்.

மனோஜ் பைனான்சியரிடம் கடன் வாங்கிய செய்தியை சரியாக சிந்தாமணி போட்டு கொடுக்க கோபத்தில் இருக்கிறார் அண்ணாமலை. பைனான்சியர் அண்ணாமலையை குறை சொல்ல முத்து கடுப்பில் நான் இந்த கடனை அடைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். 

தனக்கு ஒரு வருஷம் அவகாசம் வேணும் எனக் கேட்க ஆனால் அவரோ இன்னும் 30 நாளுல அடைக்கணும். இல்ல வீட்ட ஏலம் விட்ருவேன் எனக் கூறிவிட அதிர்ச்சியில் இருக்கின்றனர் குடும்பத்தினர். அவர் கறாராக சொல்லிவிட்டு செல்கிறார்.

 விஜயா நான் 48 லட்சம் கடன் வாங்கலையே என சிந்தாமணியிடம் கேட்க எனக்கு தெரியாது எனக் கூறும் சிந்தாமணி, நீங்க ஃப்ராடு கையெழுத்து போட்டு என்ன கேட்குறீங்க என சமாளித்துவிட்டு செல்கிறார். விஜயா பேசப் போக கடுப்பில் அவரை அடித்து விடுகிறார் அண்ணாமலை. மனோஜையும் திட்டிக்கொண்டு இருக்கிறார். 

இப்போ உங்களால கடன் அவன் மேல விழுந்துட்டு என மனசு உடைஞ்சு பேசிட்டு உள்ளே சென்று விடுகிறார். விஜயா அவரை சமாதானம் செய்ய ஆனால் அண்ணாமலை உன்னை முழுசா நம்பினேன். நீ என் நம்பிக்கையை மொத்த உடைச்சிட்ட என்கிட்ட பேசாத. நான் எதுவும் செஞ்சிப்பேன் எனச் சொல்லிவிட்டு செல்கிறார். 

முத்து கடனை அடைக்க என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருக்க மீனா தன்னுடைய புது செயினை விற்று விடலாம் என்கிறார். இதை கேட்டு முத்து அதிர்ச்சியாக பார்க்கிறார். இனிமேல் ஹீரோ ஹீரோயின் ஜோடியாக கடனை அடைச்சிட்டு மீண்டும் கஷ்டப்படுவாங்க. 

மனோஜ் அவர் ஷோரூமில் ஜாலியா இருந்துட்டு விஜயா வாய் பேசிட்டு திரிவாங்க. லாஜிக்கே இல்லாம என்னப்பா கதை எடுக்குறீங்கனு ரசிகர்கள் கடுப்படிக்க ஆரம்பித்துவிட்டனர். என்ன டிஆர்பி பத்தை தாண்டுனா கூட ஆச்சரியமில்லை என்பது தான் உண்மை.