Connect with us

Cinema News

தொடர்ந்து அசிங்கப்படுத்தப்படும் முத்து… உண்மையை சொல்லிடுங்கப்பா… மனோஜை திட்டி தீர்த்த ரோகினி…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவின் அம்மாவும், சீதாவும் மீனாவின் அப்பா நினைவு நாளுக்கு அழைக்க வந்திருக்கின்றனர். ஆனால் விஜயா அல்பாய்ஸ்ல போயிட்டாரு. அவருக்கு எதுக்கு நினைவு நாள் எனச் சொல்லி அசிங்கப்படுத்துகிறார். அப்போ அங்கு வரும் மீனா எதுக்கு எங்க அம்மாவை அசிங்கப்படுத்துறீங்க என்கிறார்.

அண்ணாமலை அவளை பத்தித்தான் உனக்கு தெரியுமே என்கிறார். பின்னர் அவர்கள் கிளம்பி கீழே செல்ல முத்து அங்கு வருகிறார். இந்திரா பேசப்போக முத்து சரியாக பேசாமல் சென்று விடுகிறார். அம்மாவை அனுப்பிவிட்டு முத்துவிடம் வரும் மீனா எங்க அப்பா நினைவுநாளுக்கு அழைக்க வந்தா உங்க அம்மா அசிங்கப்படுத்துறாங்க.

இதையும் படிங்க: ஒரு ரூபாய் கணக்கு பார்த்த தயாரிப்பாளர்.. எம்.ஆர்.ராதா மகன் செஞ்சதுதான் ஹலைட்!..

நீங்க ஏன் இப்படி நடந்துக்குறீங்க? எங்க வீட்டுக்கு வந்தும் உங்க கோபத்தினை காட்டிடாதீங்க எனச் சொல்லிவிட்டு செல்கிறார். ஸ்ருதியை பார்க்க வரும் அவர் அம்மா வீட்டில் எதுவும் பிரச்னையா? உனக்கு வேலை சரியா இல்லையா என்கிறார். இல்லம்மா மூணு சீரியல் பேசுறேனே என்கிறார்.

மாப்பிள்ளைக்கு என்ன ஆச்சு எனக் கேட்க அவர் நல்லா தான் இருக்கான் என்கிறார். அப்போ ஏன் சைக்கிளில் போனீங்க எனக் கேட்க நான் கொடுத்த தண்டனை தான் அம்மா அது என்கிறார் ஸ்ருதி. பின்னர் ஹனி மூன் செல்ல ஒரு டிக்கெட்டை ஸ்ருதியிடம் நீட்டுகிறார். நீ மாப்பிள்ளையோட நம்ம வீட்டுக்கே வந்துடு எனக் கேட்கிறார்.

ஸ்ருதி, நான் ரவிக்கிட்ட கேட்டு பார்க்கிறேன் எனக் கூறிவிடுகிறார். அடுத்து வீட்டுக்கு வருகிறார் மனோஜ். ரோகினியிடம் தனக்கு வேலை போன விஷயத்தினை கூற அவரோ விளையாடுற தானே என்கிறார். இல்ல உண்மையா தான். என்னால் அங்கு வேலை செய்ய முடியாது என்கிறார். வித்யா அப்போவே சொன்னா உன்னால வேலை செய்ய முடியாது. நீ ஒரு சோம்பேறினு.

இதையும் படிங்க: எப்படி இப்படி ஓப்பனா இருக்கீங்க?!. கேள்வி கேட்டவருக்கு எம்.ஆர்.ராதா சொன்ன நச் பதில்!..

அப்போ நீயும் அப்படித்தான் நினைக்கிறீயா எனக் கேட்கிறார் மனோஜ். உனக்கு ஏன் கோபம் வருது. எனக்கு தான் கோபம் வரணும். திட்டிவிட்டு அவர் கிளம்பிவிடுகிறார். மீனா வீட்டில் நினைவுநாளுக்கான வேலை நடந்துகொண்டு இருக்கிறது. உங்க மாமியார் வீட்டில் இருந்து யாரும் வரலையே எனக் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். அப்போ முத்து கீழே வர இங்கே சத்யா சூடம் சுத்துகிறேன் என தட்டை கீழே போட்டுவிடுகிறார். இதனால் மீனாவின் அம்மா முத்துவை திட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் முத்து வாசலில் வந்து நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது. 

google news
Continue Reading

More in Cinema News

To Top