More
Categories: Cinema News latest news television

டல்லடிக்கும் சிறகடிக்க ஆசை… கொஞ்சம் ஸ்பீட் ஏத்துங்கப்பா… கடுப்பில் ரசிகர்கள்

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவின் அம்மா அவருக்கு கால் செய்து சத்யா வேலைக்கு செல்ல அடம் பிடிப்பதாக சொல்கிறார். மீனா வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறேன் என்கிறார். இங்கு விஜயா மூவரும் ஏன் மாடியில் போய் தூங்குனாங்க எனப் புலம்பி கொண்டு இருக்கிறார்.

இதனை கவனித்து வந்த அண்ணாமலை உனக்கு இப்போ என்ன பிரச்னை எனக் கேட்க இந்த வீட்டில் என்னமோ நடக்குது என்கிறார். அண்ணாமலை பிரச்னையை அவங்களே பாத்துப்பாங்க. நீ சும்மா இரு என்கிறார். அப்போ மீனாவிடம் காப்பி கேட்க வருகிறார் ரவி.

இதையும் படிங்க: கஷ்டப்பட்டு நடித்த கமலின் பட வசூலை அசால்டாக முறியடித்த ராமராஜனின் படம்…

அவரை கூப்பிட்டு பேசுகிறார் விஜயா. எதும் சண்டையா எனக் கேட்க ரவி இல்லை என்கிறார். அப்போ ஸ்ருதி நான் குளிக்கட்டுமா? இல்ல அவன் குளிக்கிறானு கேளுங்க ஆண்ட்டி என்கிறார். ரவி நான் குளிக்க போறேன் என உள்ளே சென்றுவிடுகிறார். அப்போ ஸ்ருதியிடம் சண்டைய எனக் கேட்க இதுவரை இல்லை எனக் கூறிவிடுகிறார்.

வீட்டுக்கு வரும் மீனா, சத்யாவிடம் அந்த சிட்டியுடன் சேராதே என்கிறார். உன் புருஷனும் தான் சண்டை போடுறாரு. அப்போ அவர் ரவுடி இல்லையா எனக் கேட்க மாமானு சொல்லமாட்டியா எனக் கேட்க கூப்பிட்ட வரை போதும் என முடித்துவிடுகிறார். எனக்கு நிறைய பொறுப்பு இருக்கு. சீதாக்கு கல்யாணம் பண்ணனும் எனக் கூறி வேலைக்கு சென்றுவிடுகிறார்.

இதையும் படிங்க: மார்க்கெட் போனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மம்மூட்டி!.. முதலில் ஜோதிகா இப்போ எந்த நடிகை தெரியுமா?

ரோகினி பார்லரில் வித்யாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். இனி நீ மனோஜை பிரஷர் பண்ணாதே. அவரா அவருக்கு செட்டாகிற வேலையை தேடிக்கட்டும் என்கிறார் வித்யா. அப்போ பிஏ வந்து எனக்கு 50 ஆயிரம் வேண்டும் என்கிறார். என்னால் முடியாது என ரோகினி கூற பார்லரின் மேனேஜர் வந்துவிடுகிறார்.

லேடிஸ் மட்டும் தான் அனுமதி. ஜெண்ட்ஸை உள்ளே விடாதீங்க. நீங்க இங்க வேலை தான் பார்க்குறீங்க மறந்துடாதீங்க என்கிறார். ஷெட்டில் உட்கார்ந்து சவாரி இல்லாமல் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போ சிட்டியுடன் அங்கு வருகிறார் சத்யா. இனிமே என் கண்ணு முன்னாடி நீ வரக்கூடாதுனு சொன்னேன்ல என முத்து கூறுகிறார். அப்போ அவர் முன்னாடி வந்து நின்ற சத்யா அருகில் பணத்தினை வைப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Published by
Akhilan