Connect with us

latest news

மீனாவும், முத்துவும் ரொமான்ஸ் பண்ணுற சீன்லாம் வைக்கிறாங்கப்பா!.. ஒரே குஷி தான் போல!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி உங்க அண்ணன் என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து தான் இந்த காசை கொடுத்தார் எனப் பேசி கொண்டு இருக்கிறார். ரவி எனக்கே நீ அண்ணிக்கு காசு கொடுத்தது பிடிக்கலை. என்ன இருந்தாலும் உன்னால அண்ணிக்கு நல்லது தான் நடந்து இருக்கு என்கிறார்.

இந்த நேரத்தில் அங்கு வரும் விஜயாவிடம் ஸ்ருதி இதை கூற எனக்கும் அதான் தோணுச்சு. நீ ஏன் காசெல்லாம் கொடுக்குற? இவ வேற வீட்டு வாசலில் கடையை போட்டு இருக்கா? நாளைக்கு மலேசியா சம்மந்தி வீட்டுக்கு வருவாங்க. ஸ்ருதி அம்மா வருவாங்க. நம்மளை என்ன நினைப்பாங்க எனக் கேட்க அவங்க என்ன நினைக்க போறாங்க என்கிறார் ரவி.

இதையும் படிங்க: பழைய குப்பைகளை கிளறும் விஜய், ரஜினி ரசிகர்கள்.. ஜகபதி பாபு சொன்ன கீர்த்தி சுரேஷ் மேட்டர் வைரல்!..

இதை தொடர்ந்து முதல் நாள் வியாபாரத்தினை முடித்துவிட்டு வந்து மீனா கணக்கு பார்த்து கொண்டு இருக்கிறார். இன்னைக்கு லாபமே 600 ரூபாய் எனச் சொல்ல அதை வைத்து என்ன செய்யலாம் என யோசிக்கின்றனர். அப்போ அங்கு வரும் விஜயா தாஜ்மஹால் கட்டு என நக்கல் செய்கிறார். உழைச்சு சம்பாரிச்சது எங்களுக்கு உசத்தி தான் என மீனாவை ரூமுக்கு கூட்டி செல்கிறார் முத்து.

உள்ளே சென்று மீனா பூக்கட்டி கொண்டு இருக்க இன்னைக்கு பூரா இதான் செஞ்ச ரெஸ்ட் எடு என்கிறார் முத்து. நாளைக்கு ஒரு ஆர்டருங்க எனச் சொல்லி கொண்டு இருவரும் இன்று நடந்த நல்லதை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டு ரொமான்ஸ் செய்து கொண்டும் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: விவகாரமான ரம்பா பேட்டி!.. வேட்டையன் படத்தில் கரன்ட் கட் ஆகிடப் போகுது.. புளூ சட்டை மாறன் தாக்கு!..

வீட்டில் இருக்கும் விஜயா ஏ மீனா காப்பி எடுத்துட்டு வர இவ்வளோ நேரமா என சத்தம் போட்டு கொண்டு இருக்கிறார். அங்கு வரும் அண்ணாமலை நீ என்ன கத்துனாலும் பதில் வராது என்கிறார். ஏன் அவ்வளோ திமிரா எனக் கேட்க அவங்க வீட்டில் இல்லை. காலையில் எழுந்து கோயம்பேடுக்கு பூ வாங்க போயிட்டதாக கூறுகின்றார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top