சிறகடிக்க ஆசையில் பாக்கியாவாக மாறிய முத்து… ரசிகர்களை பார்த்தா எப்படி தெரியுது?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவை நீங்க குடிக்கலையா எனக் கேட்க நான் குடிக்கலை என்கிறார். பொய் சொல்லாதீங்க. ஊதிக்காட்டுங்க எனக் கேட்க அவரை இழுத்து முத்து ஊதுகிறார். ஆமா ஸ்மெல் வர அப்போ நீங்க குடிக்கலையா ஏன் என்கிறார்.

குடிக்காமையே அவ்வளவோ பிரச்னை வந்துச்சு. அப்போ இனிமே நீங்க குடிக்க மாட்டிங்கிங்களா என மீனா கேட்க அப்படி சொல்ல முடியாது. இன்னைக்கு தோணல. நாளைக்கு தோன்றலாம் என்கிறார். இதையடுத்து முத்து ஒருவரை காரில் அழைத்து சென்று ட்ராப் செய்கிறார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் நடித்து 1200 கோடிக்கு மேல் வசூல் செய்த படம்!. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..

அவர் அட என் கையில் காசு இல்லை. இரு கடைக்குள் போய் எடுத்துட்டு வரேன் என்கிறார். இல்லப்பா இது என் கடை தான் எனக் கூறுகிறார். அப்போ உள்ளே போகும் போது ரவுடிகளை வந்து மிரட்டுகின்றனர். என்ன விஷயம் எனக் கேட்க இந்த கடையை கம்மி விலைக்கு கேட்கிறாங்க. வேற ஆளுக்கிட்ட வித்திட்டு வெளிநாடு போற ஐடியாவில் இருப்பதாக கூறுகிறார்.

அப்போ மனோஜ் நியாபகம் வர அவருக்காக கடையை கேட்க உனக்காக வேண்டும் என்றால் விலையை குறைத்துக்கொள்ளலாம் என்கிறார். வீட்டில் மனோஜ் தலைவலியுடன் வர என்ன ஆச்சு என்கிறார் விஜயா. பிசினஸ் குறித்து மாடியில் யோசிச்சிக்கிட்டு இருந்தேன் எனக் கூற அப்போ ஸ்ருதியும் ரவிக்கு தலைவலியாம் என்கிறார்.

உனக்கு என்ன என விஜயா கேட்க நானும் அவன் கூடத்தான் பேசிட்டு இருந்தேன் என்கிறார். முத்து வீட்டுக்குள் வர என்னடா உனக்கும் தலைவலியா? என அண்ணாமலை கேட்கிறார். என்ன விஷயம் என முத்து கேட்க உங்க ரெண்டு பேருக்கும் தலவலியாம் என்கிறார். இதுக்கு தான் அப்படியே குடிக்க என முத்துக்கு கூற போக இருவரும் தடுத்து விடுகின்றனர்.

இதையும் படிங்க: 60 அடியில் இருந்து கீழ விழுந்த சரத்குமார்.. 6 மாத சிகிச்சை!. அந்த படத்துக்கு அவ்வளவு கஷ்டப்பட்டாரா?!

கடையை பார்த்து விடலாம் என எல்லோரும் பேசிக் கொண்டிருக்க மீனா முத்துவை தனியாக அழைக்க சொல்கிறார். உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. நீங்க செஞ்சாலே ஏதாவது பிரச்சனை தான் முடியும் என்கிறார். அவன் வேற இடத்துக்கு போய் இந்த காசு மொத்தத்தையும் தொலைச்சுட்டு வருவான். இப்படி ஒரு நல்ல இடத்துல உட்கார வச்சா அப்பாவோட 27 லட்சத்தை வாங்கிடலாம் என்கிறார்.

எல்லாரும் கடைக்கு போய் சுற்றி பார்க்கின்றனர். மனோஜ் ஓனர் சேரில் உட்கார்ந்து சந்தோஷப்பட்டு கொள்கிறார். பின்னர் ஓனர் கடையை சுற்றிப் பார்த்தாச்சா பேசலாமா என கேட்கும் போது முத்து பேச வருகிறார். அவரை கை கொண்டு தடுக்கும் ரோகிணி நாங்க பேசுகிறோம் என தள்ளி நிறுத்துகிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

 

Related Articles

Next Story