சிறகடிக்க ஆசை: மீனாவிடம் உதவிக்கு வந்த ஸ்ருதி.. ரவியின் காதலால் கடுப்பில் இருக்கும் முத்து..!

Siragadikka Aasai: ரவியை திட்டிவிட்டு ஸ்ருதி நேராக மீனாவை வந்து வீட்டில் சந்திக்கிறார். நானும், ரவியும் காதலிப்பதாக டக்குனு போட்டு உடைத்து விடுகிறார். இதனால் மீனாவிற்கு ஒரே அதிர்ச்சியாகி விடுகிறது. உடனே ஸ்ருதியை தன்னுடைய அறைக்கு அழைத்து சென்று விடுகிறார்.

என்கிட்ட நீங்க விளையாடல எனக் கேட்கிறார். இதுல விளையாடுவேனா? நானும் ரவியும் உண்மையாவே காதலிக்கிறோம். எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க. கல்யாணம் செஞ்சிக்க கூப்பிட்டா ரவி வரல என்கிறார். கொஞ்சம் பொறுமையா இருங்க என மீனா கூறிவிடுகிறார். பின்னர் ஸ்ருதியின் அப்பா குறித்து தெரிந்ததும் மேலும் அதிர்ச்சியாகிறார்.

இதையும் படிங்க: எல்சியூவுக்கு நோ சொன்ன விஜய்!.. ஹாலிவுட் படத்தை அப்படியே உருவிய லோகேஷ் கனகராஜ்!.. அதே தான்..

எங்க வீட்டுல மாப்பிள்ளை பாத்துட்டாங்க. உங்களுக்கு நான் செஞ்ச உதவிக்கு எதுவும் நீங்க செய்யணும்னு சொல்லிக்கிட்டே இருப்பீங்கள? இத செய்யுங்க எனக் கேட்கிறார். நான் என் வீட்டுக்காரரிடம் பேசுகிறேன். ஒருநாள் மட்டும் எனக்கு டைம் தாங்க என ஸ்ருதியை அனுப்பி வைக்கிறார்.

அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் ரோகிணி, விஜயாவிடம் இனி பார்லர் வந்தால் என்னிடம் சொல்லிவிட்டு வாங்க எனக் கூறுகிறார். அந்த நேரத்தில் வெளியே போகும் ஸ்ருதியை யார் என மீனாவிடம் கேட்கிறார் விஜயா. என் பிரண்ட் எனச் சொல்லிவிட்டு செல்ல ரோகிணி எனக்கு சந்தேகமா இருக்கு எனக் கண்டுப்பிடித்து விடுகிறார்.

இதையும் படிங்க: மன்சூர் அலிகானுக்காக சிலுக்கு செஞ்ச அந்த விஷயம்!.. மனுசன் எப்பவுமே அத மறக்கவே மாட்டாராம்!.

வீட்டுக்கு வரும் ஸ்ருதி தனக்கு எப்படி நீங்க கல்யாணம் முடிவு செய்யலாம் எனக் கோபத்தில் குதிக்கிறார். இத்தனை நாள் என் லைஃப் நான் தானே முடிவு செஞ்சேன் எனக் கூறும்போது அவர் அப்பா இனி நான் சொல்றத கேளு எனக் கூறி விடுகிறார். மேலும் இனி டப்பிங்கும் போகக்கூடாது. மாப்பிள்ளை வேண்டாம் எனக் கூறிவிட்டதாக சொல்கிறார்.

உனக்கு அவர் கூடத்தான் திருமணம் எனவும் கூறிவிடுகிறார். இதனால் ஸ்ருதி அதிர்ச்சியாகி விடுகிறார். வீட்டுக்கு வரும் முத்துவிடம் மீனா, ரவியும் ஸ்ருதியும் காதல் செய்வதாக கூறிவிடுகிறார். இதனால் முத்து ரொம்ப கோபத்தில் கத்துகிறதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது. இதை தொடர்ந்து நாளை நடக்கும் நிகழ்வில் மீனாவின் தங்கையை போய் பெண் கேட்கிறார் முத்து.

Related Articles
Next Story
Share it