Connect with us

Cinema News

சிறகடிக்க ஆசை: மீனா கைக்கு சென்ற வீட்டுப்பத்திரம்… பார்வதியிடம் மீனாவை திட்டித்தீர்த்த விஜயா!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை வீட்டு பத்திரத்தை எடுத்து மீனாவிடம் கொடுத்து பீரோவில் வைத்து கொள்ள சொல்கிறார். இதை பார்த்த விஜயா, ரோகினி, மனோஜ் ஆகியோர் அதிர்ச்சி அடைய முத்து செம குஷியாகிறார். 

ஆனால் மீனா வேணாம் மாமா, என்கிட்ட எதுக்கு நீங்க அத்தைக்கிட்டையே கொடுங்க என்கிறார். விஜயாவோ ரோகினி தான கடனை அடைச்சா அவள்கிட்ட கொடுங்க. இல்லை என்கிட்ட கொடுங்க என்கிறார். ஆனால் அண்ணாமலையோ அதுக்கு பைனான்சியரிடமே இருந்துடலாம் என நக்கலடிக்கிறார்.

இதையும் படிங்க: கதை பிடித்துப் போக சம்பளமே வாங்காமல் நடித்த நடிகை! இப்ப யாராச்சும் அப்படி இருக்கீங்களா?

இதை தொடர்ந்து, மீனா தன்னுடைய பீரோவில் பத்திரத்தினை வைத்து பூட்டுகிறார். இதை பார்த்த விஜயா நீயெல்லாம் பத்திரத்தை வச்சிருக்க. கனவுல கூட சொந்த வீடு நீ கட்ட மாட்ட என திட்டுகிறார். நான் கட்ட ஆசைப்பட்டது இல்லை. ஆனா இந்தாங்க பத்திரத்தினை நீங்களே வச்சிக்கோங்க என்கிறார். 

என் வீட்டு பத்திரத்த என்கிட்டையே கொடுக்குறீயா? முத்துவாலேயே நீ கலங்கி நிற்ப பாரு. இந்த பத்திரம் எப்படி என் கைக்கு வருதுன்னு மட்டும் பாரு என சவால் விடுகிறார்.

அதையடுத்து கடுப்பில் வந்த விஜயா மனோஜ் ப்ரிட்ஜில் சாப்பிட எதுவும் தேடுகிறார். இதில் கடுப்பான விஜயா சீக்கிரம் ஒரு வேலையை தேடிக்க உனக்கு வேலை இல்லாத விஷயம் வெளியில் வந்தால் கஷ்டம். முத்துவும் சும்மா விடமாட்டான் என கூறுகிறார். 

அதனையடுத்து, ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே காதல் வசனம் பேசிக்கொண்டு நிற்கின்றனர். ஸ்ருதி, ரவியின் மீது சாய்ந்து நிற்பதை ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் ஸ்ருதிக்கு உடனே திருமண ஏற்பாடு செய்ய அவர் அப்பா முடிவெடுக்கிறார்.

இதையும் படிங்க: அட்லி எல்லாம் இப்போ தான்!.. அந்த காலத்துலயே விஜய்யை எப்படி ஏமாத்திருக்காங்க பாருங்க!..

இதே நேரத்தில் பார்வதி வீட்டுக்கு வரும் விஜயா மீனாவால் தான் நான் மாட்டுனேன். அவளுக்கு பொறாமை எனக் கடுமையாக திட்டி தீர்க்கிறார். பார்வதியோ அவ சொன்னதால தான் இந்த பிரச்னை முடிஞ்சிதுனு சந்தோஷப்படு என்கிறார்.

ரவிக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணு என அட்வைஸ் செய்கிறார் பார்வதி. எனக்கு தெரிந்த பிரண்டு பெரிய பணக்கார வீட்டில் வாழுறா. அவளுடைய பொண்ணு படிப்ப முடிச்சுட்டா அவளை தான் ரவிக்கு பேச போறேன். 

ரோகிணி மாதிரி பணக்கார வீட்டு பொண்ணு மூன்றாவது மருமகளா வந்தால் இந்த வீட்ல என்னோட கை ஓங்கும். இதனால் மீனாவின் கொட்டத்தினை அடக்கிவிடலாம் என சொல்லி சந்தோஷப்படுகிறார். இதனையடுத்து, சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top