Connect with us

Cinema News

சிறகடிக்க ஆசை: தொல்லை செய்த விஜயா… மீண்டும் வட்டிக்கு வாங்கி கடனை அடைத்த ரோகினி…

Siragadikka Aasai: விஜய் டிவியில் ஹிட் தொடராக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டின் முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பியூட்டி பார்லரை கைமாற்றிவிட்ட ரோகிணி 10 லட்ச ரூபாய் பணத்துடன் வீட்டுக்கு வருகிறார். அப்பாகிட்ட பேசுனியா எனக் கேட்கிறார். பேசிட்டேன் ஆண்ட்டி என்கிறார். உடனே காசு கொடுத்தாரா என விஜயா கேட்கிறார்.

இதில் ரோஹினி ஒருமாதிரி பார்க்க அப்பா நல்லா இருக்காரா எனக் கேட்கிறார். இருக்காரு ஆண்ட்டி என பதில் சொல்கிறார் ரோஹினி. நம்ம பிரச்னையை பேசுனியா காசு கிடைச்சிதா என்கிறார். கொடுத்தாரு உடனே அனுப்பிட்டாரு என பதில் சொல்ல, அவரை தனியாக அழைத்து வந்த விஜயா அறைக்குள் அழைத்து வந்து கதவை மூடுகிறார்.

இதையும் படிங்க: விஜய்க்கு நோ!. ரஜினி படம்னா ஓகே!. கமல் – சூர்யா முடிவுக்கு பின்னால் இருக்கும் பஞ்சாயத்து இதுதான்!..

10 லட்ச செக் மட்டுமே கொடுக்க மீதி 7 லட்ச செக் எங்க என்கிறார் விஜயா. நீங்க பியூட்டி பார்லர் வைக்க 10 லட்சம் தானே கொடுத்தீங்க. ஆனால் விஜயாவோ, உங்க கல்யாணத்துக்கு தானே 7லட்சம் வாங்கினேன் என்கிறார். நீ கேளுமா எனக் கேட்கிறார்.

இல்லை ஆண்ட்டி இதுவே கேட்க ஒருமாதிரி ஆச்சு என்கிறார். பரவால நீ கேளுமா. இல்லை நான் பேசவா எனக் கேட்கிறார். இல்லை ஆண்ட்டி, அது உங்களுக்கு மரியாதை இல்லை. நானே கேட்டு பார்க்கிறேன் என்கிறார். 

பார்லரில் வித்யா எப்படி உன்னால அவ்வளவோ ரெடி செய்ய முடியும் என ரோஹினியிடம் கேட்கிறார். பார்லர் கொடுத்ததில் 2 லட்சம் இருக்கும். நகையை அடகு வைத்து 3 லட்சம் என 5 லட்சம் சேர்த்துடலாம் என்கிறார்.

ஆனால் மீதி 2 லட்சத்துக்கு என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்க பார்லரில் வேலை செய்யும் பெண் தனக்கு ஒரு வட்டி கடைக்காரர் தெரியும் எனக் கூறி அழைத்து செல்கிறார். அந்த பெண் அழைத்து செல்லும் கடை மீனா தம்பி சத்யா நண்பனுடையது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை வேறோடு சாய்த்த விஷால்!.. ஈகோ பார்க்காம செஞ்ச வேலையால் கிடைத்த வெற்றி..

விஜயாவிடம் இருந்து திருடிய நண்பரும், சத்யாவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ரோஹிணியை பார்த்து அந்த இடத்தில் இருந்து எழுந்து சத்யா மறைந்து கொள்கிறார். ரோஹிணி தனக்கு தேவைப்படும் 2 லட்சத்தினை கடனாக வாங்கி கொண்டு செல்கிறார்.

சத்யாவிடம் அவர் நண்பர் பாத்தியா திருடிய காசு அவங்க கிட்டையே போயிட்டு. அவங்க காசுக்கே வட்டி கட்ட போறாங்க என நக்கலாக சொல்கிறார். வீட்டுக்கு வரும் ரோஹிணி 20 லட்சத்தினை எடுத்து இந்தாங்க காசு இனி என்னை பற்றியும், மனோஜ் பற்றியும் எதுவும் பேசக்கூடாது எனக் கூறுகிறார்.

ரவி இதை அப்பையே செய்திருக்கலாம்ல அண்ணி எனக் கூறுகிறார். எங்க அப்பாகிட்ட பேசக்கூடாதுனு தான் இருந்தேன். ஆனால் இங்க சிலர் பேச்சை கேட்க முடியல என்பதால் தான் இதை செய்தேன் எனக் கூறுகிறார். விஜயா நீதான் மா என் கௌரவத்தை காப்பாத்த வந்த மருமக என மெச்சிக் கொள்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top