சிறகடிக்க ஆசை: வளையலால் தொக்காக சிக்கிய விஜயா… மறுபடியும் லட்சமா? கடுப்பில் ரோகினி…

Siragadikka Aasai: விஜய் டிவியில் ஹிட் தொடராக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் தற்போது முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் நடந்த சுவாரஸ்ய விஷயங்களின் தொகுப்பு உங்களுக்காக.

ரோகினி சொன்ன மாதிரியே வாங்கிய 17 லட்சம் பணத்தை வட்டியும் கொடுத்துவிட்டேன். இனி என்னை பற்றியும் மனோஜ் பற்றியும் தேவையே இல்லாமல் பேசக்கூடாது என்கிறார். ஆனால் முத்துவோ அது எப்படி 17 லட்சத்தினை கொடுத்தாச்சு.

இதையும் படிங்க: பஞ்சாயத்தே வேணாம்!. லியோ இசை வெளியீட்டு விழா ரத்து!.. உண்மையான காரணம் இதுதானா?!…

இன்னும் இவன் தலையில இருக்க 27 லட்சம் பணத்தையும் கொடுத்துட்டா. நான் பேசாம இருந்துப்பேன் என்கிறார். இதில் ஷாக் ஆகிறார் ரோகினி. ஆனால் விஜயாவோ அதெல்லாம் ரோகினி அப்பா வந்து மொத்தமா கொடுத்துடுவாரு. ஏன்மா அப்டியே மனோஜுக்கு ஒரு பிசினஸ் வச்சு தர சொல்லுமா எனவும் கேட்கிறார்.

இதில் ரோகினி அரண்டு போய் பார்க்கிறார். பிறகு மொத்த குடும்பமும் கிளம்பி பைனாஸியர் ஆபிஸ் செல்கின்றனர். ஏன் அண்ணா எல்லாரையும் வர சொல்லணுமா? எனக்கு ட்ரிப் போகணும் என்கிறார். அவரோ எனக்கு உங்க அம்மா மேல நம்பிக்கை இல்லை, பத்திரத்த வாங்கிட்டு இல்லனு கூட சொல்லுவாங்க என்கிறார்.

கையெழுத்தினை போட்டு விட்டு பத்திரத்தினை வாங்கிவிட்டு எல்லாரும் கிளம்ப ஒரு தங்க வளையலை கொடுக்கிறார். இது என்ன கிப்ட்டா என முத்து கேட்க இல்ல உங்க அம்மா கொடுத்தது தான் என்கிறார். இதனால் விஜயா கையில் போட்டு இருக்கும் வளையல் கவரிங் என்பதை மொத்த குடும்பமும் கண்டுபிடித்து விடுகிறது.

இதையும் படிங்க: லியோ ஆடியோ லான்ச்தான் இல்ல!.. இதையாவது செய்யுங்க ப்ளீஸ்!.. கதறும் விஜய் ஃபேன்ஸ்…

 

Related Articles

Next Story