More
Categories: latest news television

சிறகடிக்க ஆசை: ஸ்ருதி-ரவி கல்யாணத்தில் பகடைக்காயான மீனா வாழ்க்கை… ஆத்திரத்தில் முத்து..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் பொய் சொல்லி போலீஸ் ஸ்டேசன் அண்ணாமலையை அழைத்து செல்கின்றனர். பின்னால் மனோஜ், ரோகினி, விஜயா ஆகியோர் அழைத்து வருவதாக கூற இல்லை ஜீப்பில் ஆழைத்து செல்வதாக கூறி ஸ்டேசன் கூப்பிட்டு சென்று விடுகின்றனர்.

அதையெடுத்து ஸ்டேசன் வந்த போலீசார் அண்ணாமலையிடம் மரியாதை இல்லாமல் பேசுகின்றனர். உங்க மகன் ரவி எங்க எனச் சொல்லிட்டு போங்க என கூறி மற்ற அனைவரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர். விஜயா வரை போலீசாரிடம் கெஞ்சி பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: விஜய்க்கே படம் பிடிக்கலையா!.. கடைசி வரை லியோவை கண்டுக்காமல் விட காரணமே அதுதானா?..

ஸ்ருதியின் பெற்றோர் அண்ணாமலையை லாக் அப்பில் போட சொல்லி சண்டை போடுகின்றனர். பையன் வருவான் என அண்ணாமலை கூற அது வரை நீங்க இருங்க என போலீசார் திட்டுகின்றனர். ஒரு கட்டத்தில் அண்ணாமலையை கைது செய்து இருப்பதாக கூறி லாக் அப்பில் அடைக்கின்றனர்.

இந்த நேரத்தில் கதறும் விஜயா இந்த முத்து எங்க போனானு தெரியலையே என அழுகிறார். இதையடுத்து அண்ணாமலையை கைது செய்த விஷயம் தெரிந்து அங்கு சென்று இருக்கும் மீனா முத்துவிற்கு போன் செய்து கைது செய்த விஷயத்தினை மட்டும் கூறுகிறார். ரவியின் திருமணம் பற்றி சொல்வதற்குள் சிக்னல் கட் ஆகிவிடுகிறது.

இதையடுத்து போலீஸ் ஸ்டேசன் வரும் மீனா கல்யாணத்தினை குறித்து கூற முற்பட அவரை தடுத்து விடுகின்றனர் போலீசார். தொடர்ச்சியாக அங்கு வரும் சீதாவிடம் ரவி எங்க என விசாரிக்கிறார். அவர் வந்தா தான் மீனாவை விடுவாங்க என மீனா சீதாவை திட்டுக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: தாத்தாவ வச்சே படம் எடுக்குறீங்க! அப்பா என்ன தக்காளி தொக்கா?.. தயாரிப்பாளரிடம் மல்லுக்கு நின்ன தனுஷ் மகன்..

கடைசியில் முத்துவும் வந்து கம்பியை கட்டிக்கொண்டு அண்ணாமலையை விடக்கூறி அழுகிறார். ஸ்ருதியை கடத்தி விட்டதாக புகார் கொடுக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் அவரிடம் கூற அதிர்ச்சி ஆகிறார். அந்த நேரத்தில் வரும் கான்ஸ்டபிள் ரவிக்கும், ஸ்ருதிக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாக கூற எல்லாரும் அதிர்ச்சி ஆகிவிடுகின்றனர்.

தொடர்ந்து மீனாவுக்கு தான் கையெழுத்து போட்ட விஷயம் மேலும் பயத்தினை கொடுக்கிறது. போலீசாரே மீனா யாரு எனக் கேட்க முத்து என் மனைவி தான் என்கிறார். அவங்க தான் சாட்சி கையெழுத்து போட்டு இருப்பதாக கூறிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Published by
Akhilan

Recent Posts