சரியா நடிக்க முடியல!.. கதறி அழுத நடிகர் திலகம்!.. ஆறுதல் சொல்லி தூக்கிவிட்ட இயக்குனர்!..

தமிழ் சினிமா துவங்கிய காலத்திலிருந்தே நடிகர்கள் தங்களுக்கு என ஒரு தனி இடத்தை பிடித்து தங்களது ரசிகப்பெருமக்களை மகிழ்வித்தும், தங்களை வளர்த்து அதன் மூலம் சமூகத்தில்  பெரிய பிம்பங்களாக காட்டிவரும் நிலை தொடரத்தான் செய்கிறது. இன்று எளிதில் சினிமாவில் நுழைந்து விடலாம் என்கின்ற நிலை நிலவி வந்தாலும், முன்னொரு காலத்தில் திரைத்துறைக்கு வர மிகப்பெரிய சோதனைகளை சந்தித்து, அவற்றை எல்லாம் கடந்து வெற்றியை ருசி பார்த்தவர்கள் பலர்.

நாடகத்துறை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்த நேரமும் உண்டு. அண்ணாதுரை, கருணாநிதி, எம்,ஜி.ஆர் போன்ற ஆளுமைகளுக்கு வித்து மேடை நாடகங்களே. நடிப்பின் பரிமாணம் இரண்டிலும் வேறு பட்டாலும் , கலைஞர்கள் சரியான விகிதாச்சாரத்தில் கொண்டு சேர்த்து இவ்விரண்டு துறைகளையும் பெருமைபடுத்தி வந்தனர்.

நாடகங்களில் நடித்து சினிமாத்துறைக்கு கிடைத்த பொக்கிஷமாக பார்க்கப்பட்டு வருபவர் “நடிகர் திலகம்” என்ற அடைமொழியை கொண்டிருப்பவர் மறைந்த சிவாஜி கணேசன். இவர் ஏற்காத வேஷங்களே இல்லை என்றும் சொன்னால் அது மிகையாகாது.

sv

“அலைகள் இல்லாத கடலும் உண்டு”, “நிறமில்லாத வானமும் உண்டு” என்று சொன்னால் கூட வராத ஆச்சர்யம், தனக்கு நடிக்க வரவில்லை அதனால் தான் பலமுறை வருந்தி அழுத்திருக்கிறேன் என சிவாஜி சொன்னதை கேட்டு வருகிறது.

சில காட்சிகளில் சரியாக் நடிக்க முடியவில்லையாம். அதனால் அவரை நடிகனாக ஏற்க மறுத்த பழைய கால நினைவுகளை சொல்லியிருந்திருக்கிறார்.  சிவாஜி இறுதிவரை தெய்வமாக பார்த்த தனது குருநாதரான “பெருமாள்” நிராகரிக்கப்படவிருந்த வாய்ப்புகளை போராடி அவருக்கு பெற்று கொடுத்திருக்கிறார்.

இவரைப்போல இயக்குனர்கள் கிருஷ்ணன், பஞ்சு இணையில், பஞ்சு தனக்கு அதிகமாக உற்சாகம் தந்து தன்னை மனதளவில் பலப்படுத்தினார், இவற்றை எல்லாம் பார்த்து ‘வருந்தாதே, இன்று உன்னை பார்த்து சிரிக்கும் கூட்டம் நாளை உன்னை தேடி வந்து உன் பின்னால் நிற்கும். அதுவரை பொறுமையாக உன் வேலையை பார்’ என்று சிவாஜி வருந்தும் நேரங்களில் எல்லாம் சொல்லிவந்தாராம்.

அவர் கூறியது பலிக்கவே அவருக்கு செலுத்தும் நன்றி கடனாக எங்கு பார்க்க நேர்ந்தாலும் சாஷ்டாங்கமாக காலில் விழுவதை பழக்கமாக வைத்திருந்ததாக தன்மையுடன் தனது முந்தைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி கணேசன்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago