தொலைக்காட்சியில் ஆங்கராக பணிபுரிந்து அதன்பின் சினிமாவில் நுழைந்து தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்தவர்தான் சிவகார்த்திகேயன்.
சில வருடங்களிலேயே தனக்கு முன்னால் சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களையும் ஓரங்கட்டி அவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்..
சினிமாவில் ஹீரோவாக வளரும்போதே தயாரிப்பாளராகவும் மாறினார்.. அவர் நடித்த சில படங்களை அவரே தயாரித்தார்.. அதில் அவருக்கு 100 கோடி வரை கடன் வரவே அதை நிறுத்திவிட்டு சின்ன பட்ஜெட் படங்களை மட்டும் தற்போது தயாரித்து வருகிறார்.. அப்படி அவரின் தலைப்பில் நேற்று வெளியான திரைப்படம்தான் தாய் கிழவி.
இந்த படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்க ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது
. இந்நிலையில் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது ‘அஜித்தை வைத்து நீங்கள் படம் தயாரிப்பீர்களா?’ என ஒருவர் கேள்வி எழுப்பினார்..
அதற்கு பதில் சொன்ன சிவகார்த்திகேயன் ‘அந்த அளவுக்கு என்னுடைய நிறுவனம் பெரிய நிறுவனம் அல்ல.. நாங்கள் சின்ன சின்ன பட்ஜெட்டில் படங்களை எடுத்து வருகிறோம்.. அஜித் சாரை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் செய்வோம். அது வேற லெவலில் இருக்கும்.. அது எனக்கு கனவுதான்’ என பதில் சொல்லியிருக்கிறார்..

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com





