சமீபகாலமாகவே திரை பிரபலங்கள் துபாயில் வீடு வாங்குவதை ஒரு கௌரவமாக கருதுகிறார்கள்.. ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் பலரும் துபாயில் வீடு வாங்கியிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் அஜித்குமார் ஏற்கனவே துபாயில் இரண்டு ஆடம்பர பங்களாவை (வில்லா) வாங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் அஜித்குமார் ஏற்கனவே துபாயில் இரண்டு ஆடம்பர பங்களாவை வாங்கியிருக்கிறார். அதேபோல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எப்போதும் துபாயில்தான் இருக்கிறார். இசையமைக்கும் பணியை கூட அவர் அங்கிருந்துதான் செய்து வருகிறார். அதேபோல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் துபாயில் சொந்தமாக ஸ்டுடியோவை துவங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த பல வருடங்களாகவே அவர் அங்கேயே வசித்து வருகிறார்.
அதேபோல் கடந்த சில வருடங்களாகவே நடிகர் சிம்பு துபாயில்தான் தங்கியிருக்கிறார். ஷூட்டிங் என்றால் மட்டுமே அவர் இந்தியா வருகிறார். சமீபத்தில் துபாயில் ஒரு வீடு வாங்கும் முயற்சியில் சிம்பு இறங்கியிருக்கும் செய்தியும் வெளியானது. அந்த வீட்டின் மதிப்பு 57 கோடி எனக்கு சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான், நடிகர் சிவகார்த்திகேயன் துபாயில் இரண்டு வீடுகளை வாங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது.. அனேகமாக சிவகார்த்திகேயன் குடும்பத்தோடு துபாயில் செட்டிலாக வாய்ப்பிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். இந்தியாவைப் போல துபாயில் சம்பாதிக்கும் பணத்தில் அதிக வரி கட்ட தேவை இல்லை. எனவேதான் திரைப் பிரபலங்கள் பலரும் துபாயில் செட்டிலாக ஆசைப்படுகிறார்கள் என சொல்லப்படுகிறது.




