Connect with us

Cinema News

உஷார் சிவகார்த்திகேயன் சார்.! கமலின் பழைய ஸ்கெட்ச்.., பிரபு தேவா, மாதவனுக்கு அடுத்து நீங்கதானாம்..,

கமல்ஹாசன் தற்போது தனது சினிமா வாழ்வில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் தனது ராஜ்கமல் நிறுவனம் மூலமாக தனது படத்தை மட்டுமின்றி வேறு ஹீரோ படங்களை தயாரிக்கவும் ஆர்வமாக இருக்கிறார். முதல் முறையாக சிவகார்த்திகேயனை அவர் தயாரிக்க உள்ளார்.

கமல்ஹாசன் சிவகார்த்திகேயனை வைத்து தயாரிக்க உள்ள திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி  எனும் இயக்குனர் இயக்கவுள்ளார். சாய்பல்லவி ஹீரோயினாக நடிக்கின்றனர். அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

முதன் முறையாக கமல்ஹாசன் இவ்வாறு வேறு ஹீரோ படத்தை தயாரிக்கிறார் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அது அப்படி கிடையாது. இதனை கமல் ஆரம்பம் முதலே செய்துவரகிறார். இதுவும் தயாரிப்பாளராக ஒரு வியாபார தந்திரம்தான் என்று கூறுகிறது சினிமா வட்டாரம்.

ஆம், தனது ஆரம்ப காலத்தில் மிக சீக்கிரமாக இளம் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வந்தார். அப்போது அவரை வைத்து காதலா காதலா எனும் திரைப்படத்தில் நடித்து உள்ளார் கமல்ஹாசன். அந்த படத்தை கமல் தான் தயாரிக்கவும் செய்தார்.

இதையும் படியுங்களேன் – நீ வா என்கிட்ட பத்திரமா பாத்துக்கிறேன்.! சிம்புவை பப்ளிக்கா அழைத்த சீரியல் நடிகை..,

அதேபோல ஹேராம் படத்தில் அப்பாஸ் நடித்துள்ளார். அதன் பிறகு கமல்ஹாசன் தயாரித்த இரண்டு படங்களில் நடிகர் மாதவன் நடித்துள்ளார்.  மாதவன் அப்போது அலைபாயுதே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன்  போன்ற படங்கள் மூலம் அதிகமான ரசிகர்களை கொண்டிருந்தார்.

மாதவனை வைத்து அன்பே சிவம் (அதில் கமலும் நடித்திருப்பார்) நள தமயந்தி போன்ற படங்களை கமல்ஹாசன் தனது நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலத்தான் தற்போது சிவகார்த்திகேயனின் உச்ச மார்க்கெட்டை கமல்ஹாசன் தனது வியாபாரத்திற்காக பயன்படுத்தி கொள்கிறார் என்ற பேச்சு தற்போது சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top