செட்டப் செல்லப்பாவாக மாறிய சிவகார்த்திகேயன்?.. பின்னாடி டோலிவுட்டே சிரிக்குது பங்கு!..

அயலான் திரைப்படம் 75 கோடி வசூல் செய்துள்ளது என போஸ்டர் வெளியிட்டதே தெலுங்கில் அந்த படத்தின் வசூல் அதிகரிக்க வேண்டும் என்கிற பக்கா பிளான் தான் காரணம் என தனுஷ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். கடைசி வரை ஒரிஜினல் கேப்டன் மில்லர் வசூலை நீங்க சொல்லவே இல்லையே பங்காளி என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தனுஷ் ரசிகர்களை பொளந்து வருகின்றனர்.

தெலுங்கு படங்கள் நேரடியாக தமிழில் ஒரே நாளில் வெளியாகி கல்லா கட்டி வரும் நிலையில், மகேஷ் பாபுவின் ஓடாத குண்டூர் காரம் படத்திற்காக தில் ராஜு பண்ண பஞ்சாயத்து காரணமாக பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாக வேண்டிய கேப்டன் மில்லர் மற்றும் அயலான் உள்ளிட்ட படங்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் வெளியாகின்றன.

இதையும் படிங்க: என் புருஷன் என்னோட சின்ன பையனா இருந்தா என்ன தப்பு!.. சூப்பர் சிங்கர் பாடகி சொல்றதை கேளுங்க!..

கேப்டன் மில்லர் திரைப்படம் டோலிவுட்டில் இன்றும் அயலான் திரைப்படம் நாளையும் வெளியாகின்றன. இந்நிலையில், அதற்காக தெலுங்கிலும் ஒரு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நேற்று நடத்தியிருந்தார் சிவகார்த்திகேயன். அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு ரசிகர் ஒருவர் திடீரென ஓடிவந்து பின்னாடி இருந்த பிரபல தெலுங்கு ஹீரோக்களை எல்லாம் விட்டு விட்டு சிவகார்த்திகேயனிடம் செல்ஃபி எடுக்க முயன்றார்.

அந்த ஒரே ஒரு ரசிகரை சிவகார்த்திகேயன் பாதுகாப்பு டீம் அப்புறப்படுத்த நினைக்க, அவரை விடுங்கப்பா என சிவகார்த்திகேயன் அரவணைத்து செல்ஃபி எடுத்துக் கொள்ள பின்னாடி இருந்து ரவி தேஜா மற்றும் வலிமை படத்தில் வில்லனாக நடித்த டோலிவுட் ஹீரோ கார்த்திகேயா உள்ளிட்டோர் சிரித்த காட்சிகளை பார்த்த தனுஷ் ரசிகர்கள் இதெல்லாம் செட்டப் என பச்சையா தெரியுது என சிவகார்த்திகேயனை கலாய்த்து வருகின்றனர். தமிழில் 75 கோடி வசூல் ஈட்டிய அயலான், தெலுங்கிலும் ஒரு 50 கோடி எடுத்தால் இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி படமாக மாறிடுமா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்க்கும் பிரசாந்துக்கும் முட்டிக்கிச்சா!.. கோட் படத்தில் புது சிக்கல்.. பிரபலம் சொன்ன மேட்டர்!..

 

Related Articles

Next Story