More
Categories: Cinema News latest news

25வது படம்னா சும்மாவா? வெங்கட்பிரபுவை டீலில் விட்ட சிவகார்த்திகேயன்! அவருடைய டார்கெட்டே இவர்தானாம்

Actor Sivakarthikeyan : கோலிவுட்டில் இப்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட அஜித் விஜய் சூர்யா இவர்களுக்கு அடுத்தபடியான ஒரு இடத்தில் சிவகார்த்திகேயன் தான் இருந்து வருகிறார். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பத்தக்க வகையில் தன்னுடைய நடிப்பாலும் படங்களாலும் மகிழ்வித்து வருகிறார் .

தற்போது சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவருடைய 25 வது படத்தை வெங்கட் பிரபு தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது வந்த தகவலின் படி சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ‘இந்தியன் 2’ ரிலீஸ் தேதியில் குழப்பமா? லைக்காவின் அமைதிக்கான காரணம் என்ன? தாத்தா வருவாரா?

ஏற்கனவே புறநானூறு படத்தில் தனுஷ் நடிப்பதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் புறநானூறு படத்தை பொறுத்த வரைக்கும் கொம்பாலையா நிறுவனம் தான் சுதா கொங்கரா உடன் இணைந்து தயாரிக்க இருக்கிறதாம் .அதுமட்டுமல்லாமல் சுதாகொங்கராவுடன் ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஒரு பேச்சு வார்த்தையை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது.

அதுதான் புறநானூறு படத்தை பற்றிய பேச்சு வார்த்தை என சொல்லப்படுகிறது. இப்போது இது சிவகார்த்திகேயனுக்கு 25 ஆவது படமாக இருப்பதால் கோட் படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். ஒரு வேளை வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால் அந்த 25 ஆவது படத்தை வெங்கட் பிரபுவே இயக்கட்டும் எனக் கூறி விடுவாராம்.

இதையும் படிங்க: எல்லா பாட்டுமே மொக்கதான்!. இப்படி ஏமாத்திட்டாரே யுவன்!.. வெங்கட்பிரபு உழைப்பெல்லாம் போச்சே!…

அதற்கு மாறாக அந்த படம் தோல்வி அடைந்தால் சுதா கொங்கராவுடன் இணைந்து புறநானூறு படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆக மொத்தம் தனது 25வது படத்தை காலம் காலமும் சொல்லும் படமாக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.

Published by
Rohini

Recent Posts