Connect with us

Cinema News

சைலன்ட்டா சித்து வேலை காட்ட பார்த்த சித்தார்த்!.. சும்மா வசமா இப்படி சிக்கிட்டாரேப்பா!.. என்ன ஆச்சு?..

சித்தார்த் தயாரித்து நடித்துள்ள சித்தா திரைப்படம் இன்று தமிழ்நாட்டில் வெளியான நிலையில், அந்த படத்தை கர்நாடகாவிலும் வெளியிட பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த்தை கன்னட அமைப்பினர் சிலர் காவேரி பிரச்சனை காரணமாக இங்கே பத்திரிகையாளர் சந்திப்பை தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் நடத்தக் கூடாது என விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவேரி பிரச்சனை தொடர்பாக மீண்டும் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே பெரிய மோதல் வெடித்துள்ளது. ஆனால், இந்த முறை நடிகர்கள் எல்லாம் அமைதியாக தங்கள் பட வேலைகளில் பிசியாக உள்ளனர்.

இதையும் படிங்க: பாட்ஷா பாரு பாட்டுக்கு 10% ஈடாகுமா லியோ செகண்ட் சிங்கிள்!.. பதிலடி கொடுக்க ரெடியான ரஜினி ரசிகர்கள்!..

இந்நிலையில், சைலன்ட்டாக சித்தா படத்தை கர்நாடகாவிலும் கொண்டு சென்று வியாபாரம் செய்ய நினைத்த சித்தார்த்திற்கு திடீரென கன்னட அமைப்பினர் சிலர் பெங்களூரில் உள்ள எஸ்.ஆர்.வி. தியேட்டரில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அத்துமீறி உள்ளே நுழைந்து மேடையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த நடிகர் சித்தார்த்தை மிரட்டி, கர்நாடகாவில் தமிழ் சினிமாவையும் தமிழ் சினிமா பிரபலங்களையும் அனுமதிக்கக் கூடாது என ஆக்ரோஷமாக கத்திக் கூச்சலிட்டு சித்தார்த்தை வெளியேறுமாறு மிரட்டினர்.

சித்தார்த் அவர்களை சமாதானப்படுத்த முயன்றும் முடியாத நிலையில், பத்திரிகையாளர்களுக்கு கையெடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்ற காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

இதையும் படிங்க: இளைய மகளுடன் பட புரமோஷனுக்கு திடீரென வந்த விஜய் ஆண்டனி!.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!..

சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்திருந்தார். தமிழ்நாட்டை போலவே கர்நாடகாவில் ஜெயிலர் படத்தை ஏகப்பட்ட ரசிகர்கள் பார்த்து மிகப்பெரிய வசூல் வேட்டை பெற காரணமாக இருந்தனர். தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ்குமார் நடித்து வரும் நிலையில், தமிழ் சினிமா பிரபலங்கள் மீது கன்னட அமைப்பினர் சிலர் இப்படி நடந்து கொள்வது சரியான விஷயமா என்கிற விவாதங்கள் வெடித்துள்ளன.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top