ஷூட்டிங் போகாமல் வீட்டில் தூங்கிய விஷால்…கடுப்பாகி தயாரிப்பாளர் செய்த வேலை…

Published on: September 6, 2022
vishal_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். ஆரம்பத்தில் விறுவிறுப்புக்கு பேர் போனவராக இருந்தார் விஷால். ஆக்‌ஷன் ஹீரோவாக காதல் மன்னனாக வலம் வந்தார். ஆனால் சமீபகாலமாக அவரை திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. மேலும் தென்னிந்திய திரைப்பட சங்க செயலாளராக இருந்து வருகிறார்.

vishal1_cine

இவரின் லத்தி திரைப்படம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்த நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் முடிந்தபாடில்லை. அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லையாம். மேலும் அடுத்ததாக மார்க ஆண்டனி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்கள் : வரிசை கட்டி நிற்கும் ஓடிடி நிறுவனம்..! புத்திசாலித்தனமாக செயல்பட்ட நடிகர் ஆர்யா…

vishal2_cine

இந்த படத்தில் 40 நாள்கள் சூட்டிங் போன விஷால் அடுத்து சூட்டிங்கிற்கு வருவதே இல்லையாம். இவரை நம்பி சூட்டிங் ஏற்பாடு செய்து செய்து கிட்டத்தட்ட தயாரிப்பாளர்க்கு 2 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாராம் விஷால். இதை பொறுத்துக் கொள்ளாத மார்க் ஆண்டனி பட தயாரிப்பாளர் விஷால் வீட்டுக்கே போய் கேட்க போயிருக்கிறார்.

vishal3_cine

இதையும் படிங்கள் : ஆண்ட்ரியா நிர்வாண காட்சி எடுத்தேன்னு யார் சொன்னது.?! அந்தர் பல்டி அடித்த சர்ச்சை இயக்குனர்.!

அங்கு போய் பார்த்தால் விஷால் தூங்கிக் கொண்டிருக்க அங்கு உள்ள வேலையாட்கள் இவரை திருப்பி அனுப்பி விட்டாராம்.கேட்டால் நான் உதய நிதியின் நண்பன் என்றெல்லாம் பில்டப் பண்ணிக்கொண்டியிருக்கிறாராம் விஷால்.மேலும் கார்த்தியிடம் புகார் செய்ய இன்று பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச் விழா முடிந்ததும் இதற்கு ஒர் நல்ல முடிவை எடுப்போம் என சொல்லியிருக்கிறாராம் கார்த்தி. மேலும் விஷாலுக்கு உடல் நிலை சம்பந்தமாக ஏதோ பிரச்சினை இருப்பதாகவு, கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.