Categories: latest news

அப்படி அவர் என்ன பண்ணாரு?!.. ராதாரவி ரிட்டயர்ட் ஆகுறது நல்லது!.. கிழித்தெடுத்த ஸ்ரீலேகா!..

தென்னிந்திய டப்பிங் கலைஞர்களுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடிப்பவர்களுக்கு டப்பிங் கொடுக்கும் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 40 வருஷமா ராதாரவி தான் தலைவராக இருக்கிறார்.

நிறைய பிரச்சனைகளைத் தாண்டித் தான் இந்த தேர்தல் நடக்கிறது. அவர் கூடவே துணைத்தலைவராக இருந்த ராஜேந்திரன், ஸ்ரீலேகா தம்பதியினர் தனியாக வந்துவிட்டனர். இப்போது அவரை எதிர்த்து ராஜேந்திரன் தனியாகப் போட்டியிட உள்ளார். இதுகுறித்து ஸ்ரீலேகா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

யாருமே வந்து ஓப்பனா பேச மாட்டேங்கிறாங்க. டப்பிங் யூனியன்ல என்ன நடக்கும்னு நமக்கு சம்பந்தப்பட்ட கமிட்டி மெம்பர்ஸ்க்குத் தான் தெரியும். அப்படி இருக்கும்போது எதுவுமே சொல்ல முடியாத நிலைமை. அதுவும் இல்லாம 40 வருஷமா நண்பரா இருக்கிறாரு. அவரு ஓய்வு பெற வேண்டிய வயசு. 36 வருஷம் சர்வீஸ்… இருக்கு. இதுவந்து எல்லா உறுப்பினர்களுடைய உயிர். அவங்களை எல்லாம் நாம தான் வழி நடத்தணும். நீயே தலைவரா இருன்னு சொல்லிருக்கலாம்.

இப்ப என்ன நடந்ததுன்னா 2 வருஷத்துக்கு முன்னாடி ராமராஜன் அணின்னு இருந்தது. அதுல தான் சின்மயி, தாசரதி, மதியழகன்னு இருந்தாங்க. அவங்க தான் போட்டி போட்டாங்க. கோர்ட்ல கேஸ் போட்டாங்க. இப்ப உபதலைவரா அங்க நிக்கிறாங்களே ஆர்.சுந்தரராஜன்… அவங்களும் அந்த அணியில இருந்து வந்தவங்க தான்…

Rajendran, Radharavi

அவங்களும் அதைக் கண்டுக்காம விட்டுட்டாங்க. ஆபோசிட்டா எந்த அணியும் இல்ல. நாமளே தன்னிச்சையா, நீதான் தலைவர், நீதான் பொருளாளர், நீதான் செயலாளர்னு வச்சிடலாம்னு நினைச்சாங்க. ஆனால் இப்படி ஒரு விஸ்வரூபம் ராஜேந்திரன் எடுப்பாருன்னு அவங்க நினைச்சிப் பார்க்கல. அதுதான் முக்கியமான காரணம் என்கிறார் ஸ்ரீலேகா.

ராதாரவியும் நான் இதுவரை எத்தனையோ எதிரிகளை சந்திச்சிருக்கேன். துரோகிகளை சந்திக்கவில்லை என்கிறார். அதற்கு ஸ்ரீலேகா சொல்லும் பதில் இதுதான்.

எதிரிகளை சந்திச்சிருக்கேன்னு சொல்றாரு. ஆனா நம்பிக்கைத் துரோகின்னா என்ன அர்த்தம். உங்ககிட்ட சொல்லாம அவரு நிக்கலையே.

உங்ககிட்ட சொல்லிட்டு நீங்களும் சரிடா நில்லுடா போடா பார்த்துக்கலாம்ன்னு சொன்னதுக்கு அப்புறம் நீங்க வரமுடியாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அவரு தலைவர் போஸ்ட்டுக்கு நின்னாரே ஒழிய, உங்களை எதிர்த்து அவரு நிக்கலையே. கதிர்னு ஒருவர எதிர்த்துத் தான் நின்னாரு. நம்பிக்கைத் துரோகின்னு பண்றதுக்கு அவரு என்ன பண்ணிருக்காரு என்று கொதித்து எழுகிறார் ஸ்ரீலேகா.

sankaran v

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

28 minutes ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

11 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

11 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

18 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

19 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago