என்னை பற்றி எஸ்.பி.பி சார் சொன்னதை மறக்கவே முடியாது!.. மைக் மோகன் நெகிழ்ச்சி...

நடிகர் மோகன் நினைவுக்கு வந்தாலே அவருடன் சேர்ந்து நினைவுக்கு வருவது அவரின் பாடல்கள்தான். தலையை ஆட்டி ஆட்டி சிரித்த முகத்துடன் அவர் அந்த பாடல்களுக்கு நடிக்கும் அந்த ஸ்டைல்தான். இளையராஜாவின் இசையில் மோகனுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான்.

மோகன் படம் என்றாலே அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களையும் அவரே பாடியிருப்பார். அதற்கு காரணம் மோகனுக்கு எஸ்.பி.பி-யை தவிர வேறு எந்த பாடகரின் குரல் 100 சதவீதம் செட் ஆகாது. மோகன் சினிமாவில் நடிக்க துவங்கியதில் இருந்தே அவருக்கு பாட துவங்கியவர் எஸ்.பி.பி.

இதையும் படிங்க: ரஜினி இல்லாமல் நான் இல்ல! லாரன்ஸ் நடிக்கும் ‘ஹண்டர்’ பட டைட்டிலுக்கு பின்னாடி இருக்கும் ரகசியம்

பல நூறு பாடல்கள் இருந்தாலும் மோகனுக்கு எஸ்.பி.பி பாடிய ‘இளையநிலா பொழுகிறதே’, நான் பாடும் மௌன ராகம், கூட்டத்துலே கோயில் புறா, நிலாவே வா செல்லாதே வா, மஞ்சம் வந்த தென்றலுக்கு, பாடு நிலவே தேன் கவிதை, இதயம் ஒரு கோவில், நிலவு தூங்கும் நேரம், சங்கீத மேகம் என பல பாடல்கள் காலத்திற்கும் மறக்கமுடியாத தேன் பாடல்களாவே இருக்கிறது.

90களில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார் மோகன். அதன்பின் பல படங்களிலும் அண்ணன் உள்ளிட்ட குணச்சித்திர வேடங்கள் வந்தது. ஆனால், அவர் நடிக்க மறுத்துவிட்டார். இப்போது ‘ஹரா’ என்கிற ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

அதேபோல், விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் வில்லனாக மோகன் நடித்திருக்கிறார். எனவே, இந்த படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஹரா படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பல கேள்விகளுக்கும் மோகன் பதிலளித்தார்.

இதையும் படிங்க: தலைவர்171 படத்தில் அந்த நடிகரா…? 38 வருஷத்துக்கு பின்னர் நடக்க இருக்கும் மேஜிக்…

அப்போது என் வாழ்வில் எஸ்.பி.பி சார் முக்கியமானவர். அவர் பாடலை கேட்டாலே யாராக இருந்தாலும் நடிக்க தோன்றும் அப்படித்தான் நானும் நடித்தேன். ‘நீ பாடுறியா? இல்லை மோகன் பாடுறாரா?’ என என்னிடமே பலரும் கேட்கிறார்கள் என எஸ்.பி.பி. சாரே என்னிடம் சொல்லி இருக்கிறார்.

மேலும், ‘நான் சிவாஜி, ரஜினி, கமல் என பலருக்கும் பாடுகிறேன். ஆனால், என் பாட்டுக்கு மிகவும் சரியாக வாயசைத்து நடிப்பவர் மோகன் மட்டும்தான்’ என தன்னுடை குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களிடம் அவர் சொல்லி இருக்கிறார். அதை எனக்கு கிடைத்த பெரிய வாழ்த்தாக எடுத்துக்கொள்கிறேன்’ என மோகன் சொல்லி இருக்கிறார்.

 

Related Articles

Next Story