Connect with us

Cinema News

சூர்யாவை அடுத்த சூப்பர்ஸ்டார் ஆக்க திட்டம்!.. தயாரிப்பாளரின் சூழ்ச்சியை புட்டு புட்டு வைத்த பிரபலம்!..

சூப்பர்ஸ்டார் சகாப்தம் முடிந்து விட்டது என திரைத்துறையில் இருந்து யாருமே வாய் திறக்காத நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு பேச காரணமே சூர்யா தான் என செய்யாறு பாலு அதிரடியாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆரம்பித்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து 2023ன் இறுதி வரை செல்லும் என தெரிகிறது.

சூப்பர்ஸ்டார் ரேஸில் சூர்யா:

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆரம்பித்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பதிலடி கொடுத்த நிலையில், சூப்பர்ஸ்டார் சகாப்தமே முடிந்து விட்டது, இனிமே கங்குவா A mighty valiant (Saga) தான் என்பது போல எஸ்.ஆர். பிரபு ட்வீட் போட்டு இருக்கிறார் என புதிய பஞ்சாயத்து ஆரம்பித்துள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவருமே தங்கள் அடுத்த படத்தின் வியாபார அரசியலுக்காக போட்டிப் போட்டு டிரெண்டாகி வரும் நிலையில், கங்குவா படத்தை பிரம்மாண்டமாக சூர்யா உருவாக்கி வரும் நிலையில், அந்த படத்தின் பிசினஸுக்கு சூர்யாவின் சொந்தக்காரர் என்கிற முறையில் உதவலாமே என்கிற நினைப்பில் தான் அப்படியொரு ட்வீட்டை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு போட்டிருக்கிறார் என்றும் கங்குவா வெளியானால் ஜெயிலர் மற்றும் லியோ படங்களின் வசூலை பின்னுக்குத் தள்ளும் என சூர்யா ரொம்பவே கணக்குப் போட்டு வேலை பார்த்து வருகிறார் எனக் கூறியுள்ளார்.

 

எஸ்.ஆர். பிரபுவுக்கு அந்த காண்டு தான்:

இன்னொரு பக்கம், கைதி படத்தைத் தொடர்ந்து கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் தனது பேனரில் இயக்குவார் என கழுகு போல காத்திருந்த எஸ்.ஆர். பிரபுவுக்கு ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை லோகேஷ் கனகராஜுக்கு கொடுத்து வளைத்துப் போட்ட நிலையில், செம கடுப்பாகி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

ரஜினிகாந்தின் படத்தை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் கைதி 2வுக்கு எப்போ வருவது, நாம எப்போ கல்லா கட்டுவது என நினைத்தே லோகேஷ் கனகராஜை பகைத்துக் கொள்ள முடியாது என்பதால், ரஜினிகாந்த்திடமே தனது வீரத்தை எஸ்.ஆர். பிரபு தைரியமாக காட்டியிருக்கிறார் என செய்யாறு பிரபு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top