Connect with us
murugadas

Cinema News

துப்பாக்கி கதை விஜய்க்கு பண்ணது இல்ல!.. அந்த ஹீரோ நடிக்கல!.. பகீர் கிளப்பும் முருகதாஸ்…

சினிமா உலகை பொறுத்தவரை ஒரு கதையில் எந்த நடிகர் நடிப்பார் என்றே சொல்ல முடியாது. ஒரு இயக்குனர் ஒரு கதையை உருவாக்கி ஒரு ஹீரோவிடம் சொல்வார். அந்த ஹீரோவுக்கு பிடித்திருந்து எல்லாம் சரியாக அமைந்தால் அந்த ஹீரோ நடிப்பார். இல்லையேல் அது இன்னொரு ஹீரோவுக்கு போகும்.

இப்படி அஜித் கேட்ட கதை சூர்யாவுக்கு போகும். சூர்யா கேட்ட கதையில் விக்ரம் நடித்திருக்கிறார். கமலுக்கு சொல்லப்பட்ட கதையில் ரஜினி ஹீரோவாக நடித்திருக்கிறார். விஜய்க்கு சொல்லப்பட்ட கதையில் சூர்யா நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதையும் படிங்க: கோட் பட இசையமைப்பாளருக்கு கொக்கிப் போட்ட காடுவெட்டி ஹீரோ!.. இதுல யாரு சொல்றதுப்பா நிஜம்?..

தீனா படம் மூலம் இயக்குனராக மாறினார். விஜயகாந்தை வைத்து ரமணா கொடுத்து அடுத்த ஷங்கர் என பாராட்டை பெற்றார். கஜினி கதையை அஜித்திடம் சொல்லி அவருக்காக காத்திருக்க முடியாமல் சூர்யாவை வைத்து எடுத்து அஜித்தின் கோபத்திற்கு ஆளானார். அதன்பின் இப்போதுவரை முருகாதஸின் இயக்கத்தில் அவர் நடிக்கவே இல்லை.

விஜயை வைத்து துப்பாக்கி, கத்தி என இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். இதில் துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் அடித்து முருகதாஸின் இமேயையும் உயர்த்தியது. ஏனெனில் அந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை முருகதாஸ் அவ்வளவு சிறப்பாக அமைத்திருந்தார்.

இதையும் படிங்க: அதான இன்னும் வலைய விரிக்கலையேனு பாத்தேன்! அலேக்கா ‘மஞ்சுமெல் பாய்ஸை’ தட்டி தூக்கிய தயாரிப்பாளர்

ஆனால், இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் விஜய் இல்லையாம். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய முருகதாஸ் ‘இந்த கதையை நான் முதலில் எடுக்கவிருந்தது ஹிந்தியில்தான். அக்‌ஷய் குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவரிடம் கால்ஷீட் இல்லை. எனவே, தமிழில் எடுத்துவிட்டு அடுத்து ஹிந்தியில் எடுப்போம் என முடிவேடுத்தேன். அப்படித்தான் துப்பாக்கி படம் உருவாகி அஜித் விஜய் நடித்தார்’ என முருகதாஸ் கூறியிருந்தார்.

அதேநேரம், தமிழில் துப்பாக்கி வெளியாகி ஹிட் அடித்ததால் ஹிந்தியில் அக்‌ஷய்குமார் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top