latest news

ஜெயலலிதாவை பார்த்து சொடக்கு போட்டு பேசிய ரஜினி!. செவாலியே விழாவில் நடந்தது என்ன?…

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 1995ம் வருடம் தமிழக அரசு சார்பில் சிவாஜி கணேசனுக்கு விழா எடுக்க வேண்டும் என ரஜினி முடிவெடுத்து அரசு தரப்பில் சொல்லப்பட்டது.. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மற்றும் முதல்வர் ஜெயலலிதா மேடையில் இருக்க சிவாஜி மாஸாக எண்ட்ரி கொடுப்பது போல நிகழ்ச்சியை நடத்தலாம் என ரஜினி நினைத்தார். ஆனால் ஜெயலலிதாவிடம் அது நடக்குமா?.. அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என அரசு தரப்பில் சொல்லப்பட்டது..

‘அப்படியென்றால் நான் நிகழ்ச்சிக்கு வரல’ என கோபப்பட்டார் ரஜினி. ‘சிவாஜி சாருக்கு விழா. உங்கள் கோபத்தை ஒதுக்கிவச்சிட்டு வாங்க’ என கமல் உள்ளிட்டவர்கள் சொல்ல ரஜினி அந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தார். ஆனால் சிவாஜி, ரஜினி, கமல் என பலரும் காத்திருக்க ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார் ஜெயலலிதா.. மேடையில் ஏறிய ஜெயலலிதா அனைவரும் வணக்கம் சொல்ல கோபத்திலிருந்த ரஜினி ஜெ.வுக்கு வணக்கம் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.. ஏனெனில், சிவாஜியை காத்திருக்க வைத்து ஜெயலலிதா அவரை அவமரியாதை செய்துவிட்டதாக ரஜினி நினைத்தார்.

மைக்கை பிடித்த ரஜினி எடுத்தவுடனேயே ‘இதெல்லாம் எனக்கு பிடிக்காது’ என்றார் அதிரடியாக.. மேடையில் இருந்து எல்லோரும் அதிர்ந்துவிட்டார்கள். ரஜினி தன்னைத்தான் சொல்கிறார் என ஜெயலலிதாவும் புரிந்து கொண்டார். ‘நீங்க திறந்து வச்சீங்களே ஃபிலிம் சிட்டி.. அப்பவே சிவாஜி சாரை கௌரவப்படுத்தி இருக்கணும்.. அதை நீங்க செய்யல.. சரி அந்த தப்பையெல்லாம் இப்ப சரி செஞ்சுட்டீங்க’ என்றார் ரஜினி.. மம்முட்டி, சிரஞ்சீவி, ஸ்ரீதேவி என இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்கள் மேடையில் இருக்க அப்படி பேசினார் ரஜினி.. இது அதிமுக தொண்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

விழா முடிந்ததும் ரஜினியை தாக்க வந்தார்கள்.. அப்போது பாக்யராஜ்தான் ரஜினியை பாதுகாப்பாக காரில் ஏறி அனுப்பி வைத்தார். பாக்யராஜ் 50 விழாவில் ரஜினி பேசியபோது ‘நான் ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டு ஆவேசமாக பேசிட்டேன்னு அதிமுக தொண்டர்கள் என்னை தாக்க வந்தாங்க.. அப்போது பாக்கியராஜ்தான் என்னை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிச்சார்’ என சொல்லியிஇருந்தார்.. அது இந்த நிகழ்வுதான்..

இதுதான் ஜெயலலிதா மீது ரஜினிக்கு கோபத்தை ஏற்படுத்திய முதல் சம்பவம். அதன்பின் பாட்ஷா பட விழாவில் ‘தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது.. அரசு வேடிக்கை பார்க்கிறது’ என்று பேசினார்.. அதேபோல் ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என பேசினார்.. ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மூப்பனாரை கலைஞருடன் கூட்டணி அமைக்க வைத்து ஜெயலலிதாவை தோற்கடித்தார் ரஜினி

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

13 minutes ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

1 hour ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

2 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

8 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

11 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

12 hours ago