Subramaniapuram: சுப்ரமணியபுரம் படத்தால் உருவான பாலிவுட் படம்… சண்டை செய்த முக்கிய டிவிக்கள்… இவ்வளோ சர்ப்ரைஸ் இருக்கா?

subramaniapuram
Subramaniyapuram: தமிழ் சினிமா வரலாற்றில் சில திரைப்படங்கள்தான் கிளாசிக் பட்டியலில் இணையும். அப்படி ஒரு படமாக சசிகுமார் இயக்கத்தில் உருவானது தான் சுப்ரமணியபுரம். இப்படத்தில் பலர் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆச்சரிய தகவல்களும் இடம்பெற்று இருக்கிறது.
அமீரின் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் வந்தவர்தான் சசிகுமார். அந்த நேரத்தில் அவருக்கு திடீரென சுப்பிரமணியபுரம் படம் இயக்க வாய்ப்பு அமைய பருத்திவீரனிலிருந்து வெளியேறினார். அந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரையும் நடித்துக் கொடுத்தார்.
நடிப்பை விட இயக்குனராக சசிக்குமாருக்கு வரவேற்பு அதிகம் இருந்த நிலையில் அவர் இரண்டு படங்களுடன் தன்னுடைய டைரக்சன் வேலையை நிறுத்திக் கொண்டார். சுப்பிரமணியபுரம் மதுரையை சுற்றி 80களில் நடக்கும் கதைக்களமாக அமைக்கப்பட்டிருந்தது.
இதற்காக பெரிய அளவில் ஆராய்ச்சி செய்யப்பட்டு எண்பதுகளில் இருந்த மதுரையை கண்முன் கொண்டு வந்தார். ஒரு இடத்தில் கூட பிசிறு தட்டாதே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்த படத்தின் ஹீரோவாக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் பாக்யராஜின் மகன் சாந்தனு.
ஆனால் அவருக்கு அந்த நேரத்தில் சக்கரகட்டி பட வாய்ப்பு அமைய அதுவரை மற்ற படங்களில் ஒப்புக்கொள்ளவில்லை என பாக்கியராஜ் மறுத்து இருக்கிறார். இதனால் சசிகுமார் வேறு ஹீரோவை தேட அந்த நேரத்தில் கிடைத்தவர் தான் ஜெய். அவர் கதை கூட கேட்காமல் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு இசையமைத்தவர் விஜய் டிவி புகழ் ஜேம்ஸ் வசந்தன். முதல் முதலில் இப்படத்திற்காக தான் ப்ரோமோஷன் என தனியாக பாடலை இசை அமைத்திருக்கின்றனர். இப்படத்தில் சசிகுமார் மட்டுமல்லாது ஹீரோயின் சுவாதி, நடிகராக சமுத்திரக்கனி என பல அறிமுகங்கள் இருந்தது.
கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து இப்படம் தியேட்டருக்கு வந்தது. முதலில் சுமார் வரவேற்பு கிடைக்க ரசிகர்களின் வாய்மொழியால் படம் தொடர்ச்சியாக வரவேற்பை பெற்று காட்சிகளும் அதிகரிக்கப்பட்டு வசூல் குவித்தது.
முதல்முறையாக இப்படத்தை ஒரே நேரத்தில் சன் டிவி மற்றும் ஜீ தமிழ் என இரண்டு தொலைக்காட்சிகளும் வாங்கியது. போட்டியில் இரண்டு தொலைக்காட்சிகளுமே ஒரே நேரத்தில் இப்படத்தை ஒளிபரப்பு செய்து பின்னர் சன் டிவி மொத்த உரிமையும் தன் வசப்படுத்தியது.
இப்படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு பின்னர் பாலிவுட்டில் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்திற்கு சுப்ரமணியபுரம் தான் காரணம் என மகுடம் சூட்டிய நிகழ்வும் நடந்தது. இந்த படம் 2014ல் புத்தகமாகவும் வந்தது குறிப்பிடத்தக்கது.