தனுஷ் ரொம்ப நல்லவர் தான் ஆனால் அவரின் நண்பர்களால் தான் அப்படி மாறிவிட்டார் என்று பாடகி சுசித்ரா கூறி இருக்கின்றார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 20 ஆண்டுகாலம் பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. தன்னுடைய வசீகரக் குரலால் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அனைத்தும் ஒட்டுமொத்தமாக பறிபோனது. 2017 ஆம் ஆண்டு பாடகி சுசித்ரா ட்விட்டர் கணக்கிலிருந்து நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி மிகப்பெரிய வைரலானது.
இந்த செய்தியை ரசிகர்கள் சுசி லீக்ஸ் என்று கலாய்த்து வந்தனர். மேலும் சுசித்ராவின் முதல் கணவரான நடிகர் கார்த்திக் குமார் சுசித்ராவுக்கு மனநிலை பிரச்சனை இருப்பதாக கூறி விவாகரத்து செய்தார். இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் சுசித்ரா பேட்டிக் கொடுத்திருந்தார். அப்போது பேசிய அவர் சுசி லீக்ஸ் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும் தனுஷும் சேர்ந்து பார்த்த வேலை தான் இது. இதற்கு நான் பலியாகிவிட்டேன் என்று கூறியிருந்தார். மேலும் என்னுடைய கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் தனியாக அறையில் இருந்தார்கள். எனது கணவர் ஒரு ஓரினை செயற்கையாளர் என பல விஷயங்களை கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய டாப் நடிகர், நடிகைகளை குறித்து பல விஷயங்களை போல்டாக பேசி இருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் பற்றி youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கின்றார். அப்போது பேசிய அவர் கூறியிருந்ததாவது ‘தனுஷ் என்னுடைய தம்பி மாதிரி. நாங்கள் இருவரும் முன்பு நல்ல நண்பர்களாக இருந்தோம். சதி வேலை செய்து எங்களின் நட்பை கெடுத்து விட்டது கார்த்திக் குமார்தான். அவன்தான் உண்மையான வில்லன். அவன் உண்மையான முகம் அனைவருக்கும் தெரிய வேண்டும்.
கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே தனுஷுக்கும் எனக்கும் நல்ல ஒரு நட்பு இருந்தது. நான் அவனை பலமுறை உரிமையுடன் திட்டி இருக்கின்றேன். ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக என்னிடம் வந்து சொன்னபோது கூட நான் அதெல்லாம் வேண்டாம் என்று கூறினேன். அந்த அளவுக்கு நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்து வந்தோம்.
தனுஷ் மற்றவர்களை பழி தீர்க்கும் எண்ணம் கொண்ட நபர் அல்ல. ஒரு நைட்டில் கேடுகெட்ட 20 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து அவனை அப்படி கட்டாயப்படுத்தியதால் தான் தனுஷ் அப்படி செய்திருக்கின்றார். என்னை போல அவரும் பாதிக்கப்பட்டவர் தான். இப்போது அவர் படம் வெற்றி பெற்றதை பார்க்கும்போது மனதளவில் சந்தோஷமாக இருக்கின்றது என்று சுசித்ரா அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் எப்படி எல்லாம் நடிக்கிறாங்க பாருங்க என்று கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நடிகர் தனுஷ் படம் நன்றாக ஓடியவுடன் அந்தர் பல்டி அடித்து விட்டார் பாடகி சுசித்ரா என்று தெரிவித்து வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…