More
Categories: Cinema News latest news

ஞானவேல் ராஜா மீது கோபத்தில் சுதா கொங்கரா!.. மொத்த இமேஜை இப்படி சல்லி சல்லியா உடைச்சிப்புட்டாரே!..

அமீரை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவர் இயக்கிய ராம் படத்தை இயக்குனர் சுதா கொங்கரா மேக்கிங்கே சரியில்லை என விமர்சித்ததாக பேசி தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு உதாரணமாக ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டியால் சுதா கொங்கரா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் என்கின்றனர்.

2010ம் ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்தை வைத்து துரோகி எனும் படத்தை இயக்கி இயக்குனர் ஆனவர் தான் சுதா கொங்கரா. முதல் படம் அவருக்கு படுதோல்வி படமாக அமைந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: இறுதிச்சுற்று படம் எடுக்க இவங்க தான் இன்ஸ்பிரேஷன்!.. அந்தர் பல்டி அடித்த சுதா கொங்கரா!..

அதன் பின்னர் என்ன செய்வதென்றே தெரியாமல் சினிமாவில் கதைக்காக பல வருடங்கள் அலைந்து திரிந்த வந்த அவருக்கு துளசி எனும் தலீத் பெண்ணின் பாக்ஸிங் கதை பற்றி தெரிந்ததும் அவருடன் பேச்சுக் கொடுத்து மொத்த கதையையும் உருவி இருக்கிறார்.

மும்பையில் இருந்து எழுத்தாளர் ஒருவரை வரவழைத்து எழுதப்பட்ட அந்த கதை தான் இறுதிச்சுற்று என 2016ம் ஆண்டு படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு எந்தவொரு உதவியும் அங்கீகாரத்தையும் கொடுக்காமல் சுதா கொங்கரா ஏமாற்றி விட்டதாக அந்த பெண்ணே அளித்த பேட்டியை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: சொந்த காசுல சூனியம் வச்சிகிட்டேன்… ஹீரோவான காரணத்தை உடைத்த அமீர்…

ஆனால், சினிமாவில் தான் ஏதோ புரட்சிகர பெண் இயக்குனர் என்கிற போர்வையுடன் சுதா கொங்கரா வலம் வந்து ஊரை ஏமாற்றி வருகிறார் என தற்போது அமீரின் ரசிகர்கள் மட்டுமின்றி பல விமர்சகர்களும் சுதா கொங்கராவை போட்டு வெளுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேவையில்லாமல் தன்னை இந்த வம்பில் மாட்டி விட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது கடும் கோபத்தில் சுதா கொங்கரா இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் முகத்துக்காக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் இத்தனை ஆண்டுகள் சேர்த்து வைத்த பெயரை மொத்தமாக கெடுத்து விட்டான் என திட்டியதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

Published by
Saranya M

Recent Posts