500 கோடிக்கும் மேல் முதலீடு!.. பெரிய படங்களை தட்டி தூக்கிய சன் டிவி!…..

by சிவா |   ( Updated:2025-04-09 05:29:36  )
sun tv
X

தனியார் டிவி சேனல்கள் உருவாக துவங்கியியிருந்த நேரம் முதலில் உருவானது சன் தொலைக்காட்சி நிறுவனம். தமிழ் மாலை என்கிற பெயரில் லோகோ வீடியோவும் உருவாக்கி வெளியிட்டார்கள். அதோடு, சன் மியூசிக்கில் 24 மணி நேரமும் பாடல்க, தினமும் ஒரு திரைப்படம் என மக்களை கவரும்படியான நிகழ்ச்சிகளை உருவாக்கினார்கள்.

இதனால் சன் டிவியை பலரும் பார்க்க துவங்கினார். அதன்பின் சீரியலை கொண்டு வந்தார்கள். பெண்களிடம் சீரியல் அதிக வரவேற்பை பெற்றது. இதனால் சன் டிவியின் டி.ஆர்.பி அதிகரிக்க துவங்கியது. தமிழகத்தில் சன் டிவி என்பது ஒரு சிறப்பான கார்ப்பரேட் நிறுவனமாக உயர்ந்தது.

good bad ugly
#image_title

ஒருகட்டத்தில் தமிழகத்தின் உள்ள தனியார் சேனல்களில் சன் டிவி நம்பர் ஒன் நிறுவனமாக மாறியது. தியேட்டரில் வெளியாகும் புதிய படங்களின் தொலைக்காட்சி உரிமையை வாங்கி சன் டிவியில் வெளியிட துவங்கினார்கள். அப்படி வெளியிட்ட சிங்கம், அரண்மனை, காஞ்சனா, கஞ்சனா 2 போன்ற படங்கள் எப்போது டிவியில் போட்டாலும் அதிக டி.ஆர்.பியை பெறுகிறது.

ஒருபக்கம் சன் பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தை துவங்கி திரைப்படங்களை தயாரிக்கவும் துவங்கினார். இந்த நிறுவனம் தயாரித்த 90 சதவீத படங்கள் வெற்றி படங்கள்தான். இப்போது அட்லியின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம் 600 கோடி செலவில் உருவாகவுள்ளது.

இந்நிலையில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ, ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து நாளை வெளியாகவுள்ள குட் பேட் அக்லி ஆகிய எல்லா படங்களின் சாட்டிலைட் உரிமயை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது. இதற்காக 500 கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கிறது.

Next Story