More
Categories: Cinema News latest news

அட்வான்ஸை திருப்பி கேட்ட சன் டிவி… திணறிப்போன செல்வராகவன் படக்குழுவினர்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?

பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது முதல் திரைப்படமான “காதல் கொண்டேன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தனித்துவ இயக்குனர் என்ற பெயரை பெற்றுவிட்டார். “காதல் கொண்டேன்” திரைப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் “7ஜி ரெயின்போ காலனி” திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.

ஆனால் செல்வராகவன் அதன் பின் இயக்கிய “புதுப்பேட்டை”, “ஆயிரத்தில் ஒருவன்”, “மயக்கம் என்ன”, “இரண்டாம் உலகம்”, “என் ஜி கே”, “நெஞ்சம் மறப்பதில்லை” போன்ற எந்த திரைப்படமும் வெற்றித் திரைப்படமாக அமையவில்லை.

Advertising
Advertising

இதனை தொடர்ந்து “பீஸ்ட்”, “சாணி காயிதம்” போன்ற திரைப்படங்களில் செல்வராகவன் நடித்தார். தற்போது “பகாசூரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியாக தயார் நிலையில் உள்ளது.

இதனிடையே தனுஷை வைத்து “நானே வருவேன்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது.

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு “மன்னவன் வந்தானடி” என்ற திரைப்படத்தை இயக்க தொடங்கினார் செல்வராகவன். இத்திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆதிதி போஹங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை சுசாந்த் பிரசாந்த் என்பவர் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்தது.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக இத்திரைப்படம் முழுமையாக முடிவடையவில்லை. எனினும் இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் சன் டிவிக்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது சன் நிறுவனம் இத்திரைப்படத்திற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறுத்திவிடுமாறு கூறியிருக்கிறார்கள். மேலும் சன் நிறுவனம், தயாரிப்பு நிறுவனத்திடம்  கொடுத்த அட்வான்ஸையும் திருப்பி கேட்டுள்ளதாம்.

“மன்னவன் வந்தானடி” திரைப்படத்திற்கு அப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இத்திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக இத்திரைப்படம் இன்றுவரை வெளியாகவில்லை.

 

Published by
Arun Prasad

Recent Posts