Connect with us
sundar c

Cinema News

அப்பா ‘அன்பே சிவம்’ படம் ஓடாது!.. துள்ளிக் குதித்த இயக்குனர்!.. சுந்தர்.சி சொன்ன சோகக்கதை!..

Anbe sivam: தமிழ் திரையுலகில் ஜனரஞ்சகமான படங்களை இயக்கி வருபவர் சுந்தர் சி. பெரும்பாலும் காமெடி கலந்த குடும்ப திரைப்படங்களை இயக்குவார். சுந்தர் சி படங்கள் என்றாலே காமெடி தூக்கலாக இருக்கும் என நம்பியே ரசிகர்கள் தியேட்டருக்கு போவார்கள். இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, கிரி, வின்னர் ஆகிய படங்களே அதற்கு சாட்சி.

கார்த்திக்கை வைத்து சில படங்கள், அஜித்தை வைத்து உன்னைத்தேடி, ரஜினியை வைத்து அருணாச்சலம், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். விஜயை வைத்து மட்டும் இதுவரை இவர் இயக்கவில்லை. ‘பலமுறை முயற்சி செய்தும் அது நடக்காமல் போய்விட்டது, இனிமேலும் அதற்கு வாய்ப்பில்லை’ என ஊடகம் ஒன்றில் சுந்தர் சி ஃபீல் பண்ணி பேசியிருந்தார்.

இதையும் படிங்க: அதானே திருந்திட்டா எப்படி? அதெல்லாம் நடக்காது… சபரிமலை ட்ரிப்பில் ரஜினி செய்த காமெடி

கமலை வைத்து இவர் இயக்கிய அன்பே சிவம் திரைப்படம் அவர் இயக்கியதிலேயே சிறந்த திரைப்படம் என எல்லோரும் சொல்வதுண்டு. கமல்ஹாசன் கதை, வசனம், திரைக்கதை அமைக்க சுந்தர் சி இயக்கியிருந்தார். ‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சக மனிதன் மீது அன்பு காட்டுபவனே கடவுள்’ என்கிற கான்செப்டை மையமாக வைத்து இப்படத்தை கமல் எழுதியிருந்தார்.

நல்ல சினிமா விரும்பிகளுக்கு இந்த படம் பிடித்திருந்தாலும் வியாபார ரீதியாக படம் ஓடவில்லை. ஆனால், கமல் ரசிகர்கள் எப்போதும் இப்படத்தை சிலாகித்து பேசுவதுண்டு. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர் சி ‘அன்பே சிவம் படம் வெளியானபோது இன்னொரு கமர்ஷியல் படமும் வெளியானது. அன்பே சிவம் படத்தின் பிரிவ்யூ ஷோவிற்கு அந்த பட இயக்குனரும் வந்திருந்தார்.

இதையும் படிங்க: ஆக்டிங்னா 20 லட்சம்.. அதுக்குனா 50 லட்சமா? கல்லா கட்டும் பிரபல நடிகை

படம் முடிந்தவுடன் துள்ளிக்குதித்து மிகவும் சந்தோஷமாக போனார். அதாவது ‘இந்த படம் ஓடாது. நம்ம படம் தப்பிடும்’ என்பது போல இருந்தது அவரின் சந்தோஷம். கமல் சாரிடம் ‘சார் அவர பாருங்க துள்ளி குதிச்சி போறார்’ என சொன்னேன். அதற்கு கமல் சார் ‘ சார் நாம நல்ல படம் எடுத்திருக்கோம். நல்லதே நடக்கும்’ என சொன்னார்.

ஆனால், படம் ஓடவில்லை. எனக்கு அப்படம் சரிவையும் கொடுத்தது. எனவேதான். சொந்த தயாரிப்பில் கிரி படம் எடுத்தேன். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது’ என சுந்தர் சி சொல்லி இருந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top