ஷூட்டிங்கில் சுந்தர்.சியுடன் நயன்தாரா சண்டையா? எக்ஸில் விஷயத்தை சொன்ன குஷ்பூ!

Mookuthi Amman2
Mookuthi Amman2: பரப்பாக நடந்து வரும் மூக்குத்தி அம்மன்2 படத்தின் ஷூட்டிங்கில் சண்டை என விஷயம் பரவிய நிலையில் நடிகை குஷ்பூ இதுகுறித்து அளித்து இருக்கும் விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை நயன்தாரா தன்னுடைய கேரியரை காலி செய்ய அவரே திட்டம் தீட்டி இருக்கிறார் போல. கடந்த சில வருடங்களாகவே அவரின் அராஜகத்தால் தயாரிப்பாளர்களும் கடுப்பில் உள்ளனர்.
ஒரு காலத்தில் தனி நாயகியாக கெத்து காட்டி வந்தவர் தற்போது பட வாய்ப்புக்காவே இறங்கும் நிலை வந்து இருக்கிறது. சின்ன சின்ன பட்ஜெட்டில் அவர் தனி நாயகியாக நடிக்கும் படங்கள் போஸ்டர் அறிவிப்புடன் முடங்கி இருக்கிறது.
இது ஒரு புறமிருக்க முன்னணி ஹீரோக்கள் நயனை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்யவும் மறுப்பு தெரிவித்து வருவதாகவே தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் நயன்தாராவின் தற்போதைய ஒரே நம்பிக்கையாக இருக்கிறது மூக்குத்தி அம்மன்2.

இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக சமீபத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. அதில் நயன் மட்டுமல்லாமல் நடிகைகள் மீனா, குஷ்பூ, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். இதனால் தனக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நயன் நினைத்த நிலையில் நால்வருக்கும் சமமான உரிமை கொடுத்தது அவருக்கு கடுப்பானதாகவும் தகவல்கள் கசிந்தது.
அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் ரெஜினா எடுத்த செல்பி புகைப்படத்தாலும் நயன்தாரா கோபமாக அவரை மிரட்டிய தகவலும் கசிந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சுந்தர் சியிடன் நயன்தாரா சண்டை போட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ இது குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் விளக்கம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில், சுந்தர்.சி ஆதரவாளர்களுக்கு, மூக்குத்தி அம்மன்2 தொடர்பான பலவிதமான ஆதாரம் இல்லாத அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன.

தயவுசெய்து இவை குறித்து கவலைப்படாதீர்கள். படப்பிடிப்பு சரியாகவும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. அனைவரும் அறிந்திருப்பது சுந்தர்.சி என்பவர் ஒரு நேர்மையான நபர். நயன் ஒரு சிறந்த மற்றும் தொழில்முறை நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் அவர் கடந்த காலத்தில் இதே கதாபாத்திரத்தை நடித்து அதன் மதிப்பை நிரூபித்துள்ளார்.
இந்த எதிர்மறை விமர்சனங்கள் "திருஷ்டி எடுத்து போல" என சொல்லலாம். எல்லா விஷயங்களும் நல்லதற்கு தான் நடைபெறுகிறது. உங்கள் ஆதரவோ, ஆசீர்வாதங்களோ மற்றும் அன்போ தான் எங்களுக்குப் முக்கியம். எப்போதும் எங்களுடன் இருப்பதற்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.