Connect with us
Rajni 24

Cinema History

அடுத்தடுத்து 3 படங்கள்!.. ரஜினிக்கு உதவும் மந்திரங்கள்.. சீக்ரெட்டை வெளியே சொன்ன பிரபலம்…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். வரும் கோடைகாலத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் வெளிவர உள்ளது. தொடர்ந்து அவருக்குப் பல படங்கள் வர உள்ளன. இதுபற்றி பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான அனந்தன் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். பார்ப்போமா…

ரஜினிக்கு லால்சலாம், வேட்டையன், தலைவர் 171 என தொடர்ந்து படங்கள் வர உள்ளன. அவர் எப்போதும் உற்சாகமாகவே இருப்பாராம். அதற்குக் காரணம் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் நாட்டமாக இருக்கிறார். பொது மேடைகளில் பேசும் போது முத்திரைகள் மற்றும் தியானம் குறித்து பேசுவார். அப்போது எந்தெந்த முத்திரைகளில் இருந்தால் என்னென்ன பலன்கள், புத்துணர்ச்சி கிடைப்பதற்கு என்ன முத்திரை, தியானம் என பேசுவார். அதை எல்லோரும் செய்தால் பலன் கிடைக்கும் என்றும் சொல்லி ஊக்கப்படுத்துவார்.

இதையும் படிங்க… சைனிங் கன்னத்தை குளோசப்பில் காட்டி மயக்கும் ரம்யா பாண்டியன்!. எக்கச்சக்கமா குவியுது லைக்ஸ்…

அவருடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலரும் இதைத் தான் சொல்வார்களாம். தற்போது வேண்டுமானால் அவருக்கு ஓய்வு தேவைப்படலாம். படப்பிடிப்பைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விட்டு கிளம்பி விடுவார். ஆனால் ஒரு காலத்தில் நைட் 12 மணி வரை சூட்டிங் நடக்குமாம். அப்போது கூட 1 மணிக்கு கிளம்பி விட்டு அதிகாலை 4 மணிக்கு சூட்டிங் வைத்தாலும் ப்ரஷாக வந்து நிற்பாராம் ரஜினி. இதற்குக் காரணம் அவர் செய்து வரும் முத்திரைப் பயிற்சியும், தியானமும் தானாம். இதை நீண்டகாலமாகவே செய்து வருகிறாராம்.

இதையும் படிங்க… வாய்ப்புக்காக அஜித்திடம் போராடிய இயக்குனர்!… சொல் பேச்சு கேட்கலைல வாய்ப்பே கிடையாது!…

அவர் உடலில் பல சர்ஜரிகள் நடந்து இருந்தாலும் இன்னும் சுறுசுறுப்பாகவும் உ ற்சாகமாகவும் அவர் நடந்து வருகிறார் என்றால் அதற்குக் காரணமே இந்த ஆன்மிகப் பயிற்சிகள் தானாம். இப்படியே அவர் தொடரும்பட்சத்தில் இன்னும் 10 ஆண்டுகள் வரையிலும் கூட அதே சுறுசுறுப்பாக நடித்தாலும் ஆச்சரியமில்லை. தற்போது காலத்திற்கு ஏற்பவும், தனது வயதிற்கு ஏற்றவாறும் நடிக்கத் தொடங்கி விட்டார் ரஜினி. இப்போது மாரி செல்வராஜ் உடன் கதை கேட்டு ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் இந்தப் படம் வர இன்னும் 2 வருஷமாகி விடும்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் அனந்தன் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top