More
Categories: Cinema History Cinema News latest news

சூப்பர்ஸ்டார் ரஜினியையே காரி துப்பிய பிரபல இயக்குனர்..! படத்துக்காக இப்படியா..! என்ன படம் தெரியுமா?

Rajinikanth: சில நடிகர்கள் சினிமாவுக்கு பல ரிஸ்கான காட்சிகளில் நடித்தாலும் தங்களின் ஸ்டார் வேல்யூவை குறைக்கும் காட்சிகளில் நடிக்க தயங்குவார்கள். அப்படி இருக்கும் காட்சிகள் சில சமயங்கள் டூப் வைத்து கூட சமாளிக்கப்பட்டு விடும். ஆனால் ரஜினி தன் நடிப்புக்கு எல்லாமே ஓகே என செய்த காட்சி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

பாரதிராஜா இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படம் 16 வயதினிலே. இந்த திரைப்படத்தில் மயிலாக ஸ்ரீதேவியும், சப்பாணியாக கமலும், பரட்டையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நடித்திருந்தனர். வில்லனாக அவர் அப்போது நடித்திருந்தாலும் பலருக்கும் இப்போ அந்த படத்தினை பார்க்கும் போது ரஜினியை ரசிக்க கூடும்.

இதையும் படிங்க: கலைஞர் அந்த நடிகைக்கு செய்த உதவி! அதே போல் முதல்வர் செய்யமாட்டாரா? மனைவிக்காக முறையிட்ட விக்ரமன்

அந்த படம் ரஜினியின் ஆரம்ப கால திரைப்படம் என்பதால் எப்படியாவது ஜெய்ச்சு விட வேண்டும் என்பதில் வெறியாக இருந்தாரம். எந்த காட்சிகளை சொன்னாலும் அசராமல் நடித்து கொடுத்து விடுவாராம். அப்போது ஒருமுறை ஸ்ரீதேவி ரஜினி முகத்தில் காரி துப்புவது போன்ற காட்சி இருந்தது.

இதற்காக ஸ்ரீதேவியை நிற்க வைத்து ரஜினி முன் வைத்து அவர் மீது சோப்பு நுரையை வீசி படமாக எடுத்து விட்டனர். ஆனால் பாரதிராஜாவுக்கு இந்த காட்சி மீது அத்தனை திருப்தி இல்லையாம். அவர் முகமே சரியில்லாததை கண்ட ரஜினி அருகில் போய் அமர்ந்து என்னவென்று விசாரிக்கிறார்.

இதையும் படிங்க: மகள் நிச்சயம் முடிந்த சந்தோஷத்தில் நம்ம ஹரால்டு தாஸ பாருங்க! என்னமா ஸ்டைலா இருக்காரு?

அதற்கு பாரதிராஜா அந்த காட்சி எனக்கு பெரிதாக திருப்தியாக இல்லை எனக் கூறிவிட்டார். இதைக் கேட்ட ரஜினி எதையும் யோசிக்காமல் நீங்கள் என் முகத்தில் காரி துப்புங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால் பாரதிராஜா அதிர்ந்து நின்று விட்டார்.

ஆனால் ரஜினி விடாமல் என் முகத்தில் காரி துப்புங்கள் என வற்புறுத்தி கொண்டிருந்தாராம். ஒரு கட்டத்தில் அவரும் சம்மதிக்க பாரதிராஜா ரஜினி முகத்தில் எச்சிலை உண்மையாக துப்ப விட்டது தான் அந்த காட்சியை படமாக்கினார்களாம். இதை தன்னுடைய பல பேட்டியில் பாரதிராஜா சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts