More
Categories: Cinema News latest news

அமீருக்கு அல்வா!.. பாலிவுட்டில் பெரிய ஆபிஸ்!.. சூர்யா, சிவகுமார் எங்க இருக்காங்க பாருங்க!..

பருத்திவீரன் பஞ்சாயத்தின் போது நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி அமைதி காத்தனர். ஆனால் தற்போது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா புதிதாக மும்பையில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பெரிய அலுவலகத்தையும் அங்கே திறந்திருக்கிறார்.

அந்த அலுவலகத்திற்கு சிவகுமார் மற்றும் சூர்யா என்று ஞானவேல் ராஜாவை வாழ்த்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertising
Advertising

இதையும் படிங்க: காட்ஃபாதர் ஸ்டைலில் சிவாஜி நடிக்கவிருந்த படம்!.. கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன கமல்!..

தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் பெரிய அளவில் பக்கா பிளான் போட்டு பல படங்களில் நடிக்க நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே தனது 2d நிறுவனம் மூலமாக அக்ஷய் குமார் நடித்து வரும் சூரரைப் போற்று இந்தி படமான சர்ஃபிரா படத்தை தயாரித்துள்ளார். அடுத்து க்ரீன் ஸ்டூடியோ நிறுவனத்தையும் தற்போது பாலிவுட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.

நடிகை ஜோதிகா சென்னையில் இருந்து சூர்யாவை மும்பைக்கு அழைத்துச் சென்றதே அடுத்தடுத்து இந்தியில் மிகப்பெரிய நடிகராக சூர்யாவை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: பிரியாமணியை பார்த்து ஃப்ரீயா வருவீங்களா?.. இல்லை காசுக்கு வருவீங்களான்னு கேட்ட தொகுப்பாளர்?…

கர்ணா எனும் வரலாற்றுப் படத்தில் கமிட்டாகி உள்ளார் சூர்யா. பிரம்மாண்டமாக அந்த படம் பாலிவுட்டில் தயாராக உள்ளது. கங்குவா படத்தைத் தொடர்ந்து கர்ணா படத்தில் நடிக்கும் சூர்யா மேலும், சில இந்தி படங்களில் பாலிவுட்டில் நடிக்கப் போகிறார் என்றும் அதற்காகத்தான் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் முன்பையில் புதிய கிளையை தொடங்கி இருக்கிறது என்கின்றனர்.

வெற்றிமாறனின் வாடிவாசல் பக்கம் சூர்யா வருவாரா? மாட்டாரா? என்கிற பேச்சுக்களும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், சூர்யா பாலிவுட்டில் பல வேலைகளை சைலன்ட்டாக பார்த்து வருகிறார் என்கின்றனர்.

Published by
Saranya M

Recent Posts