Connect with us

Cinema News

கே.ஜி.எப் குழு செய்த காரியத்தால் கடுப்பான சூர்யா ரசிகர்கள்.! அப்டி என்னதான் நடந்தது.?!

நேற்று முழுவதும் சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருந்தனர். ஏன் என்றால் தற்போது சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். பாலாவின் கடைசி சில படங்கள் சரியாக போகாத காரணத்தால் இந்த படத்தை எப்படியும் வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்று அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.

அதற்கு அடுத்ததாக சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி முதல் முறையாக இணையாக உள்ளதால் இந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதற்கு அடுத்ததாக சூர்யா – இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்றார்போல நேற்று கேஜிஎப் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தை ஹாம்பலே நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே சூர்யா ரசிகர்கள் கே ஜி எஃப் திரைப்படத்திலிருந்து கே ஜி எஃப் பட நிறுவனம் சூர்யா இணையும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர் என்று இணையதளத்தில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சூர்யாவிற்கு அடுத்தடுத்து பெரிய படங்கள் ரிலீசாக உள்ளது என ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டனர்.

இதையும் படியுங்களேன் –  வீட்டிற்கு வரலாமா.? வைரமுத்து போனை சட்டெனெ துண்டித்த A.R.ரகுமான்.! அடுத்து நடந்தது வேற லெவல்..,

ஆனால் தற்போது வெளியான தகவலின்படி, சுதா கொங்கரா  – சூர்யா இணையும் திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். சுதா கொங்கரா வேறொரு ஹீரோவை வைத்து உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்க உள்ள திரைப்படத்தை தான் கேஜிஎஃப் பட நிறுவனம் தயாரிக்க உள்ளதால், தற்போது சூர்யா ரசிகர்கள் மிகவும் விரக்தியில் உள்ளனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top