நேற்றிலிருந்து இன்று வரை சோஷியல் மீடியாக்களில் சூர்யா தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். ஏனென்றால், நேற்று சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் இன்று சூர்யாவின் 47-வது பிறந்தநாள் இதனால் ரசிகர்கள் நேற்றிலிருந்து இப்போது வரை சூர்யாவின் பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிப்பின் நாயகன் என்று அவரது ரசிகர்கள் அவருக்கு கொடுத்த அந்த பட்டத்தை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய விருது வாங்கி நிரூபித்து விட்டார் சூர்யா. ஆனால், பிதாமகன் படத்திலேயே அவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என பல ரசிகர்கள் வருத்தத்துடன் தெரிவித்து தருகின்றனர்.
இதையும் படியுங்களேன்- தனுஷ் பாணியில் ஹாலிவுட் பிரபலத்தை பின்தொடர்ந்த பெரிய இடத்து மாப்பிளை… கலாய்க்கும் ரசிகர்கள்…
இந்த நிலையில், இன்று சூர்யாவின் பிறந்தநாள் மற்றும் அவர் தேசிய விருதை வாங்கிய கொண்டாடும் விதமாக ரசிகர்கள் டிவிட்டரின் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கட்அவுட், பைக்கில் ஊர்வலம் சுற்றுவது, கேக் வெட்டுவது என அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
தமிழில் சூர்யாவிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு தெலுங்கிலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதற்கு உதாரணமாக ஆந்திராவில் உள்ள சூர்யா ரசிகர்கள் பலர் கூட்டம் கூட்டமாக ரேடியோ கட்டி, சூர்யாவின் புகைப்படம் கொண்ட கொடியை தூக்கிக்கொண்டு பைக்கில் ஊர்வலம் வருகிறார்கள். இதுவரை, எந்த தமிழ் நடிகருக்கும், தெலுங்கு ரசிகர்கள் இந்த அளவுக்கு பைக் பேரணி செய்ததில்லை. இது தான் முதல் முறை.
தமிழ் ரசிகர்கள் கூட இன்று சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு இப்படி செய்யவில்லை, ஆனால் தெலுங்கு ரசிகர்கள் பைக் பேரணி செய்து தமிழ் சினிமாவை அதிர வைத்துள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் பேசாம நீங்க தெலுங்கு பக்கம் போய்டுங்க சூர்யா என்று கூறி வருகிறார்கள்.
கடந்த இரண்டு…
நடிகர் அதர்வா…
தமிழ் சினிமாவில்…
இந்த ஆண்டு…
'தங்கச்சிய நாய்…