என்ன சொல்ல வராரு சூர்யா?.. புறநானூறு படம் குறித்து திடீரென அறிக்கை.. அப்போ அவ்ளோ தானா?..

Published on: March 19, 2024
---Advertisement---

கங்குவா படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு வில்லனாக அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் உதிரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபாஸின் கல்கி படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நிகழ்காலம் மற்றும் கடந்த காலம் என இந்த படத்தில் சூர்யா இரு வேறு தோற்றங்களில் மகதீரா படத்தில் வருவது போல நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: மீண்டும் ’உன்னை நினைத்து’ மோடுக்கு சென்ற சூர்யா!.. பெண்களின் சாதனைகளை பட்டியலிட்டு மாஸ் ஸ்பீச்!..

கங்குவா படம் பக்கம் ரசிகர்களின் ஃபோகஸ் இருந்து வரும் நிலையில், திடீரென அடுத்த படம் என சொல்லப்பட்டு வரும் புறநானூறு படத்தின் அப்டேட்டை சூர்யா எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் கொடுத்திருக்கிறார்.

அதில், புறநானூறு திரைப்படம் உருவாக அதிக காலம் எடுத்துக் கொள்ளும் என்றும் விரைவில் அந்த படத்தில் இணைவேன் எனக் கூறியிருக்கிறார். இதன் மூலம் சூர்யா என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மகனை களம் இறக்கி காணாமல் போன தயாரிப்பாளர்!.. எவ்வளவு ஹிட் கொடுத்த மனுஷன்!..

சூர்யா இந்தியில் அடுத்ததாக கர்ணன் படத்தில் நடிக்க உள்ள நிலையில், புறநானூறு படம் அந்த படம் முடிந்த பின்னர் தான் ஆரம்பமாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. சுதா கொங்கரா ஒரு பக்கம் படத்தின் சூட்டிங்கை ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த படம் என்ன ஆகும் என்றும் ரசிகர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர்.

வெற்றிமாறன் உடன் சூர்யா இணைந்து வாடிவாசல் படத்தில் அப்போ நடிக்கவே வாய்ப்பில்லையா? என்றும்  ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.