Connect with us
suriya

Cinema News

கலைஞர் 100 விழாவில் அமீர் – சூர்யா சந்திப்பு… அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஆச்சர்யம்…

Suriya ameer: விஜயகாந்தின் மரணத்திற்கு முன் ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயம் பருத்திவீரன் படத்தில் அமீருக்கு நேர்ந்த பிரச்சனைதான். நந்தா படத்தில் வேலை செய்தபோது அமீருக்கும், சூர்யாவுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அதன்பின் மௌனம் பேசியதே படத்தில் அவரையே ஹீரோவாக போட்டு படமெடுத்தார் அமீர்.

அதன்பின் பருத்திவீரன் படத்தை அமீர் எடுக்க நினைத்தபோது சூர்யாவை நடிக்க வைக்கவே நினைத்தார். ஆனால், அவரின் தம்பி கார்த்தியை பார்த்துவிட்டு அவரை வைத்து படத்தை துவங்கினார். 2 வருடங்கள் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சிவக்குமாரின் உறவினர் ஞானவேல் ராஜா இப்படத்தின் மூலம் கோலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

இதையும் படிங்க: பஞ்சாயத்தே வேணாம்!. உதயநிதியை கழட்டிவிட்ட ரஜினி!.. தலைவர் 172-வில் நடந்தது இதுதான்..

அதன்பின் என்ன நடந்தது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். ஞானவேல் ராஜா தனக்கு கொடுக்கவேண்டிய ரூ.1.65 கோடி பணத்தை இதுவரை கொடுக்கவில்லை என்பதுதான் அமீரின் குற்றச்சாட்டு. அதோடு, அமீரை மிகவும் மோசமாக விமர்சித்தார் ஞானவேல் ராஜா. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே மன்னிப்பும் கேட்டார்.

ஒருபக்கம், கார்த்தியின் 25வது பட விழாவிலும் அமீர் கலந்துகொள்ளவில்லை. தனக்கு முறையான அழைப்பு இல்லை என்று அவர் கூறியிருந்தார். அதேபோல், இவ்வளவு பிரச்சனை போய்கொண்டிருந்த போதும் சூர்யா இதுபற்றி எந்த விளக்கும் அளிக்கவில்லை. ஒரு டிவிட் கூட போடவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தில் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். அமீர் நடிப்பதை சூர்யா விரும்புவாரா?.. இல்லை அமீர் இப்படத்திலிருந்து விலகிவிடுவாரா என பல்வேறு சந்தேகங்களும் எழுந்தது.

இதையும் படிங்க: பயில்வான் காலில் விழுந்த இசைஞானி இளையராஜா!… அதை செய்ய வைத்த பிரபலம்!.

இந்நிலையில்தான், சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவில் சூர்யா கலந்துகொண்டார். அப்போது வெற்றிமாறனுடன், அமீரும் சென்றிருந்தார். அமீரை பார்த்த சூர்யா ‘அண்ணே எப்படி இருக்கீங்க?’ என விசாரித்து அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம். இதைப்பார்த்த பலருக்கும் இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதைப்பார்க்கும்போது வாடிவாசல் படத்தில் அமீர் நடிப்பார் என்றுதான் தோன்றுகிறது. அதேநேரம், அமீரோடு கலந்து பேசி பருத்திவீரன் பட பிரச்சனைக்கு சூர்யா முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: ரஜினியின் பொன்விழா ஆண்டில் மகுடம் சூட்டப்போகும் லோகேஷ்! நடத்தப் போறது யார் தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema News

To Top