Connect with us

Cinema News

நம்பவைத்து காலை வாரிய சூர்யா.!? கடைசில இவரையும் தெலுங்கு பக்கம் விரட்டிட்டாங்களே.!

நேற்று முன்தினம் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சூர்யா ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழகமெங்கும் பல இடங்களிலிருந்து சூர்யா ரசிகர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

அப்போது சூர்யா தனது அடுத்தடுத்த படங்கள் பற்றி ரசிகர்களிடம் தெரிவித்தார். அப்போது அடுத்ததாக பாலா இயக்கத்தில் ஜோதிகாவும்  தானும் இணைந்து நடிப்பதாக தெரிவித்தார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் விரைவில் உருவாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்களேன் – விஜய் சேதுபதிக்கே அந்த அடினா.? நம்ம கதி அதோ கதிதான்.! தெறித்து ஓடிய பிரபலம்.!

ஆனால், அதற்கு முன்பே அறிவிக்கப்பட்ட சிறுத்தை சிவா படம் பற்றி அவர் பேசவில்லை. எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முடிந்ததும், சூர்யா, பாலா மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரே நேரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

அதனால், தற்போது சுதாரித்துக்கொண்ட சிறுத்தை சிவா, சூர்யா அழைப்பதற்கு முன்னர் ஒரு தெலுங்கு படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம். அதனை முடித்து விட்டு அதன் பிறகு சூர்யா கால்ஷீட் கிடைத்த உடன் அவரது படத்தை இயக்கலாம் என்று திட்டமிட்டுள்ளாராம். விரைவில் சிறுத்தை சிவா இயக்கும் தெலுங்கு பட அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top