Categories: latest news

தப்பித்து கொண்ட விஜய்.! நீதிபதியிடம் கூறிய ‘அந்த’ ஒரு வார்த்தை.!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவே இருந்து வருகிறார் என்று கூறலாம். அவரது, படங்களை அடுத்தடுத்த வசூல் சாதனைகள் அதனை நிரூபித்து வருகின்றன என்றும் கூட சொல்லலாம்.

மேலும், விஜய் மக்கள் இயக்கம் எனும் இயக்கத்தை நடத்தி அதன் மூலம் தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார் விஜய். இவர், வெளிநாட்டிலிருந்து ஒரு சொகுசு கார் இறக்குமதி செய்திருந்தால் அதற்கு சரியான வரி கட்டவில்லை என்று நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்து இருந்தது.

இதற்கு, வரி கட்டச் சொல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் விஜய் தரப்பு அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தது அந்த தீர்ப்புக்கு அந்த மேல்முறையீட்டு மனுவுக்கு சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வந்தது. அது விஜய் க்கு சாதகமாகவே அந்த தீர்ப்பு அமைந்தது.

அந்த மனுவில், விஜய் தரப்பில் கூறப்பட்ட வாக்கியங்கள் என்னவென்றால் அதாவது மேல் நாட்டிலிருந்து இறக்குமதியாகும்  வாகனங்களுக்கு வரி செலுத்துவது செல்லும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன்- விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்கு பறந்த பச்சை கிளிகள்.! ஐஸ்வர்யா மட்டும் எங்கே.?!

ஆனால், செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்தவில்லை, என ஏற்கனவே குறிப்பிட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி விஜய் தரப்பு வாதாடி உள்ளது. இதனை ஏற்று விஜய்க்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது என்றும் பேசப்படுகிறது.

Published by
Manikandan