‘வணங்கான்’ கைவிட்டு போனாலும் சூர்யா செய்த தியாகம்!.. பதிலுக்கு பாலா என்ன செஞ்சார் பாருங்க!..

Vanangan Movie: ஒரு வழியாக வணங்கான் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது. டீஸரை பார்த்த பல பேர் அப்படியே பிதாமகன் விக்ரம் ஸ்டைலை ஃபாலோ பண்ணியிருக்காரே அருண்விஜய் என்றெல்லாம் கமெண்ட் அடித்தார்கள்.

இதற்கு பதில் கூறிய வலைப்பேச்சு அந்தனன் பாலா படம் என்றாலே அவர் என்ன ஸ்டைல் ஃபாலோ பண்ணுகிறாரோ அதே ஸ்டைல்தான் எல்லா படத்திலும் இருக்கும். பாலசந்தர் படம் என்றால் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பாரதிராஜா படம் என்றால் ஒரே மாதிரியான ஸ்டைல்தான் இருக்கும்.

இதையும் படிங்க: சேது படத்தின் கதையை கார்த்திக்கிடம் சொன்ன பாலா!.. நவரச நாயகன் அடித்த நச் கமெண்ட்!..

இதில் பாலா மட்டும் என்ன விதிவிலக்கா? என்று கூறியிருக்கிறார். ஆனால் இதற்கிடையில் பாலா செய்த ஒரு செயல்தான் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம். சூர்யா இந்தப் படத்தை விட்டு விலகியதும் அருண் விஜய் உள்ளே வந்ததும் புதியதாக போஸ்டர்கள் எல்லாம் தயாராகியிருக்கிறது.

உடனே பாலா அனைவரையும் அழைத்து இந்த புதிய போஸ்டரை தயவுசெய்து சூர்யா இருக்கும் தெருக்களில் மட்டும் ஒட்ட வேண்டாம். பார்த்தார் கொஞ்சம் வருத்தப்படுவார் என்று சொல்லி அதை தடுத்திருக்கிறார். இது சூர்யா மீது பாலாவுக்கு இருக்கும் அக்கறை என வலைப்பேச்சு அந்தனன் கூறினார்,

இதையும் படிங்க: சிவாஜியின் ஆஸ்தான இயக்குனரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய எம்.ஜி.ஆர்!.. காரணம் இதுதான்!…

அதுமட்டுமில்லாமல் சூர்யா விலகி படத்தின் டீஸர் எல்லாம் வெளியானாலும் முன்னதாக வணங்கான் படத்திற்காக சூர்யா செய்த செலவு கோடியை தொடும் என்கிறார்கள். அந்தப் பணத்தை சூர்யா இன்னும் பாலாவிடம் கேட்கவே இல்லையாம். இது பாலா மீது சூர்யா வைத்திருக்கும் மரியாதை என வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.

 

Related Articles

Next Story